மின் கம்பம் மீது ஜீப் மோதியதில் கம்பம் முறிந்து இன்ஸ்பெக்டர் தலையில் பலத்த காயம் ! குளித்தலை பகீர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குளித்தலை அருகே உள்ள தேவதானம் நெடுஞ்சாலையில் மின்கம்பம் மீது இன்று 06.08.2024 அதிகாலை, போலீஸ் ஜீப் மோதியதில் மின் கம்பம் முறிந்து ஜீப் மீது விழுந்ததில் குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை.

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி திருச்சி – கரூர் நெடுஞ்சாலை தேவதானத்தில் சாலை ஓரமாக இருந்த மின் கம்பம் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப் சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் இரண்டாக முறிந்து, ஜீப் மீது விழுந்ததில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Sri Kumaran Mini HAll Trichy

விபத்து நடந்த மின்கம்பம்
விபத்து நடந்த மின்கம்பம்

Flats in Trichy for Sale

படுகாயம் அடைந்த இன்ஸ்பெக்டர் உதயகுமார் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மின்கம்பம் மீது போலீஸ் ஜீப் மோதியதில் அந்த பகுதியே இருளில் மூழ்கியது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய அலுவலர்கள், நெடுஞ்சாலையில் தடுப்பு அமைத்து முறிந்த கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய மின் கம்பத்தை நட்டு மீன் வினியோக பணியில் அதிகாலை 3 மணி முதல் 10 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

– நௌஷாத்,

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.