(PSTM) சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு…
மாநிலத் தகுதித்தேர்வு (TNSET 2024) நடத்துவதற்கு அறிவிக்கை (எண்.01/2024) நாள். 20.03.2024 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டது. அரசாணை மற்றும் UGC யிடமிருந்து பெறப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநிலத் தகுதித் தேர்வு 2025, மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கு எண். W.P.No.13187/2025 அடிப்படையில் மாநிலத் தகுதித் தேர்வில் (TNSET -2024) மகளிருக்கான இட ஒதுக்கீடு மற்றும் தமிழ்வழியில் (PSTM) பயின்றோருக்கான இடஒதுக்கீடு அரசாணை (நிலை) எண் 163, உயர்க்கல்வி (H1) துறை, நாள்: 18.07.2025 யின் படி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
TNSET 2024 க்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ள விண்ணப்பதாரர்களில் PSTM முன்னுரிமை கோரும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், தாங்கள் தமிழ்வழியில் 1 ஆம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை பயின்றதற்கான சான்றிதழ்களை இணைப்பில் (Format-I and II) உள்ளவாறு உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் 23.07.2025 முதல் 07.08.2025 பிற்பகல் 5.00 மணி வரை பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட தேதிக்குள் தமிழ்வழியில் பயின்றதற்கான (PSTM) சான்றிதழினை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்கள் தமிழ் வழியில் (PSTM) பயின்றதற்கான முன்னுரிமை கோர இயலாது.