ஏற்காடு சென்ற ஐ.டி. ஊழியர் தோழியுடன் சாலை விபத்தில் பலியான சோகம் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சேலம் மாவட்டம் தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாரதி (22). இவரது தோழி சாருலதா(22). இவர்கள் இருவரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்காடு செல்வதற்காக இன்று அதிகாலை கொண்டலாம்பட்டியில் இருந்து திருவாக்கவுண்டனூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த வாகனம் எதிர்பாராத விதமாக இவர்களது இருசக்கர வாகனத்தில் மோதியது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

சாலை விபத்து

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இருவரும் சாலையிலேயே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.