குளித்தலை – பாசன வாய்க்காலில் குளிக்க சென்ற 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பலி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குளித்தலையில் 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து குளிக்க சென்றவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலி. – கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி தேவதானத்தைச் சேர்ந்தவர் சென்ட்ரிங் தொழிலாளி
சிங்காரவேலன் மகன் தருண் குமார் வயது 10. இவர் தேவதானத்தில் உள்ள துவக்க பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

இன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பள்ளி மாணவன் தருண்குமார் வீட்டு அருகே உள்ள அங்குள்ள பாசன வாய்க்காலில் நண்பர்களுடன் சென்று குளித்த போது குழாயில் சிக்கி பரிதாபமாக பலியானான்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

5 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பலி
5 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பலி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

குளிக்க சென்ற சக நண்பர்கள் வீட்டிற்கு வந்து சம்பவத்தை சொன்ன போது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் தருண்குமார் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இதனை அடுத்து சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக பிணவறையில் வைத்தனர். சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவன் இறந்த இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் உறவினர்கள் கதறி அழுதனர்.

-நௌஷாத், 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.