அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குளித்தலை – பாசன வாய்க்காலில் குளிக்க சென்ற 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பலி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

குளித்தலையில் 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து குளிக்க சென்றவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலி. – கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி தேவதானத்தைச் சேர்ந்தவர் சென்ட்ரிங் தொழிலாளி
சிங்காரவேலன் மகன் தருண் குமார் வயது 10. இவர் தேவதானத்தில் உள்ள துவக்க பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

இன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பள்ளி மாணவன் தருண்குமார் வீட்டு அருகே உள்ள அங்குள்ள பாசன வாய்க்காலில் நண்பர்களுடன் சென்று குளித்த போது குழாயில் சிக்கி பரிதாபமாக பலியானான்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

5 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பலி
5 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பலி

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

குளிக்க சென்ற சக நண்பர்கள் வீட்டிற்கு வந்து சம்பவத்தை சொன்ன போது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் தருண்குமார் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Admission Enquiry Form

இதனை அடுத்து சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக பிணவறையில் வைத்தனர். சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவன் இறந்த இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் உறவினர்கள் கதறி அழுதனர்.

-நௌஷாத், 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.