பள்ளி மாணவர்கள் ஆபத்துப் பயணம் !
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் பின்புறம் மற்றும் படிக்கட்டுகளில் ஆபத்தை உணராமல் அரசுப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார். இதனை அவ்வளியே சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் .
மேலும் வீடியோ எடுத்தவரை அரசு பேருந்தின் ஓட்டுனரை வாகனத்தை நிறுத்த சொல்லி பேருந்தின் பின்புறம் மாணவர் ஒருவர் தூங்கிக் கொண்டு வருகின்றார் என்ற தகவலையும் கூறியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது .
காலை மற்றும் மாலை நேரங்களில் காவல்துறையினர் பள்ளி மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட வண்ணம் இருக்க வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .
— ஜெய்ஸ்ரீராம்






Comments are closed, but trackbacks and pingbacks are open.