இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக “இளைஞர்கள் கருத்தரங்கம்“ அமைச்சர் பங்கேற்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக திருச்சி அரியமங்கலத்தில்  ‘இளைஞர்கள் கருத்தரங்கம்’ அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் நடைபெற்றது.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

‘இளைஞர்கள் கருத்தரங்கம்’ இந்நிகழ்வில் ‘தேசியக் கல்விக் கொள்கையும் இந்தியாவின் எதிர்காலமும்’ எனும் தலைப்பில் டாக்டர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி (மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் & IDRM Convenor) அவர்களும், ‘இன்றைய இளைஞர்களுக்கு இன்றைய சவால்கள்’ எனும் தலைப்பில் ருபினி (எழுத்தாளர் சமூகச் செயற்பாட்டாளர்) அவர்களும், ‘மதநல்லிணக்கம் தமிழர் மரபு’ எனும் தலைப்பில் அருணன் (ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை) அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

‘இளைஞர்கள் கருத்தரங்கம்’ ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நிகழ்வின் தொடக்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் மேனாள் பிரதமர் வி.பி.சிங் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்வின் இறுதியாக மாநகர கழகச் செயலாளர் மு. மதிவாணன் நன்றி உரையாற்றினார் .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.