காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சைலேந்திரபாபு …
காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சைலேந்திரபாபு …
காவல் நிலையங்களில் நிறைய பதிவேடுகளை முறையாக பராமரித்த காவலர்களுக்கு பண வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார் …
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மூன்று நாள் சுற்றுப்பயணமாக சேலம் வந்தார் மேட்டூர் அணை திறப்பு கலைஞர் மேம்பாலம் திறப்பு. 50,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் இவருடன் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் வருகை புரிந்தார்.
![சைலேந்திரபாபு .ஐ.பி.எஸ்.](https://angusam.com/wp-content/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-12-at-5.45.42-PM.jpeg)
12.06.2023 இன்று முதல்வர் நிகழ்ச்சி நிறைவடைந்த உடன் சேலம் மாவட்டம் மேட்டூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கருமலை கூடல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேடு குற்ற குறிப்பு அந்த பகுதியில் நடந்துள்ள குற்றங்கள் கைது செய்யப்பட்டவர்கள் விவரம் குறித்து கேட்டறிந்தார்
முன்னதாக மேச்சேரி காவல் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்ட சைலேந்திரபாபு பதிவேடுகளை பார்வையிட்டார் இரண்டு காவல் நிலையங்களிலும் முறையாக பதிவேடுகள் பராமரிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்கள் தெரிவித்து காவல் நிலைய எழுத்தாளர்களுக்கு பண வெகுமதி வழங்கினார்.
– சோழன்தேவ்