சினிமாவான பெருமாள் முருகனின் சிறுகதை !
சினிமாவான பெருமாள் முருகனின் சிறுகதை ! எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்கின்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’. இப்படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) தெற்காசிய பிரிவின் கீழ் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது.
பெருமாள் முருகன் எழுதிய சிறுகதைகளில் ஒன்று திரைப்படமாகி , அது குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெறுவதும் இது தான் முதன்முறை.
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள அங்கம்மாள் படத்தை என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் நடிகரும் பாடகருமான பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்சாய் சாமுவேல் தான் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நடிகர்கள்
கீதா கைலாசம், சரண், பரணி, தென்றல் ரகுநந்தன், முல்லையரசி, பேபி யாஸ்மின் மற்றும் பலர்
தொழில்நுட்பக்குழு
தயாரிப்பு ; என்ஜாய் பிலிம்ஸ்
தயாரிப்பாளர்கள் ; பிரோஸ் ரஹீம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்
இணைத் தயாரிப்பாளர்கள் ; சம்சுதீன் காலித், அனு ஆப்ரஹாம், EL விஜின் வின்சென்ட் ,நிர்வாக தயாரிப்பு: அசாந்த் ராஜ் , கீர்த்தி நிபு,
கதை ; பெருமாள் முருகன்
திரைக்கதை & இயக்கம் ; விபின் ராதாகிருஷ்ணன்
இசை ; முகம்மது மக்பூல் மன்சூர், படத்தொகுப்பு ; பிரதீப் சங்கர்,
கலை இயக்குநர் ; கோபி கருணாநிதி
ஒலிக்கலவை டி.கிருஷ்ணன் உன்னி (தேசிய விருது பெற்றவர்)
ஆடை வடிவமைப்பு ; தன்யா பாலகிருஷ்ணன் (மாநில அரசு விருது பெற்றவர்)
வசனம் ; சுதாகர் தாஸ், விபின் ராதாகிருஷ்ணன், இணை இயக்கம்: G M பாண்டீஸ்வரா
ஒப்பனை ; வினீஸ் ராஜேஷ்,
மக்கள் தொடர்பு ; A.ஜான், விளம்பர வடிவமைப்பு: அனந்து அசோகன்
விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறாள் ‘அங்கம்மாள்’.