+2 தேர்வில் மாவட்டத்தில் சிறப்பிடம் ! தந்தையைப் போல தடம் பதித்த ரோஹித் !
தமிழகத்தில் சமீபத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கைகள் இரண்டும் ஊனமான நிலையில் சாதித்த மாணவன்; ஒரு கண் பார்வை முற்றிலும் பறி போன நிலையிலும் வழக்கமான பள்ளியில் பயின்று பள்ளியில் முதலிடம் பிடித்த திருச்சி ஹரிஹரன் . போன்ற சாதனை மாணவர்களின் அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
அதன் வரிசையில் இடம்பிடித்த இருக்கிறார், திருச்சியை சேர்ந்த ரோஹித். சௌடாம்பிகா கல்வி குழுமத்தில் அறிவியல் பிரிவில் பயின்ற ரோஹித், 491 மதிப்பெண்களுடன் மாவட்டத்தில் சிறப்பிடம் பிடித்துள்ளார்.

பணத்திற்கு அப்பாற்பட்டு மருத்துவம் செய்யும் உயர்ந்த உள்ளம் கொண்ட மருத்துவர்கள் சிலரில் இவரது தந்தையும் ஒருவர். இல்லாத நோய்களுக்கெல்லாம் தன்னிடம் வந்து விட்டார்களே என்பதற்காக பணம் பார்க்கும் இந்த காலத்தில், உள்ளதை உள்ளபடி வரும் நோயாளிகளுக்கு தெளிவுபடுத்தி சிகிச்சை அளிப்பவர் என பெருமையுடன் மருத்துவ துறையில் தடம் பதித்து வருபவர்.
திருச்சி புத்தூர் நால் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ரம்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் விக்னேஷ் ராஜாவின் மகன் தான் சாதனை மாணவன் ரோஹித்.
தங்களைப் போலவே தங்களது மகனும் மருத்துவத்துறையில் சாதனை படைத்து சேவைகள் புரிய வேண்டும் என்றும் மனிதர்களை நேசிப்பவர்களுக்கு இறைவன் துணை என்றும் உண்டு என்றும் ரோஹித்தை வாழ்த்தி மகிழ்ந்திருக்கிறார்கள் , சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் தலைவர் ராமமூர்த்தி மற்றும் செயலாளர் செந்தூர் செல்வன் மற்றும் மருத்துவர்களும் .
– ரூபன்.ஜி