பல்கலைக்கழகங்கள் பார்ப்பனர்களின் அக்ரஹாரங்கள் அல்ல!
பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய திருத்தங்களை நடைமுறைப் படுத்து!
பல்கலைக்கழகங்கள் பார்ப்பனர்களின் அக்ரஹாரங்கள் அல்ல!
மாணவர் சேர்க்கையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்து!
எனும் கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (0202.26) புதுடெல்லியில், தில்லி பல்கலைக் கழக வளாகத்தில் பல்வேறு மாணவர்கள் இயக்கங்கள் சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது.
JNU, Jamia, DU பல்கலைக்கழகங் களின் SFD பொறுப்பாளர்களும் (திராவிடர் மாணவர் கூட்டமைப்பு) தோழர்களும் பேரணியில் பங்கேற்றனர்.
சமுதாயத்தில் இருந்தும், பல்கலைக் கழகங்களில் இருந்தும் ஜாதியை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் முழங்கினர்.
காங்கிரஸ் கட்சியின் இராஜேந்திர பால் கௌதம், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் பிரியங்கா பாரதி, காஞ்சனா யாதவ், தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சுகுமார், ரத்தன்லால், சந்திப் யாதவ், ஜிதேந்திரா மீனா உள்ளிட்ட பல பேராசிரியர்களும் பங்கேற்றனர்.
— திராவிடர் தளம் SFD








Comments are closed, but trackbacks and pingbacks are open.