இந்திய சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே, அன்றைய இடைக்கால அரசின் நடவடிக்கைகளால் நாடெங்கும் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடித் தேடி கைது செய்தது காவல்துறை.
நீதிக் கட்சி காலத்திலிருந்து திராவிட இயக்கப் பயணம் மேற்கொண்ட திருவொற்றியூர் சண்முகம் அவர்களுக்கு சொந்தமான மண்ணடி- பவளக்காரத் தெரு 7-ஆம் எண் வீட்டில்தான் பிரிந்து வந்தோர் ஒன்று கூடினர்.