இலங்கையில் உள்நாட்டுப் போரை நிறுத்தி சமாதானம் செய்வதற்காக சென்ற இந்திய அமைதிப்படை மையம் கொண்டிருந்த காலத்தில் ஈழத்தமிழ்ப் பகுதியில் நடந்த ஒரு திருமண வீட்டில் ஒரு இரவு முழுக்க நீடிக்கும் பதட்டமும் பயமும் தான் இந்த ‘நீளிரா’.
இன்றைக்கு உலகம் போர்ச் சூழலில் இருக்கிறது. இஸ்ரேலிலும் ஈரானிலும் தினமும் குண்டுகள் விழும் செய்திகளைப் பார்க்கிறோம், கேட்கிறோம். ஆனால் குண்டுகள் விழுகின்ற இடத்தில் அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி,