2006 -11 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெற்றதாக அதிமுகவின் ஜெயலலிதா குற்றம்சாட்டி பரப்புரை செய்தார். திமுகவின் ஆ.இராசா, கனிமொழி மீது 2G ஊழல் வழக்கு தொடரப்பட்டது.
1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மட்டும், ஸ்ரீரங்கம் தனித்தொகுதி என்ற வகைப்பாட்டில் எதிர்கொண்டிருக்கிறது. அந்த தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் ஜோதி வெங்கடாச்சலம் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.
திமுக, அதிமுக என்னும் இரு திராவிடக் கட்சிகளைக் குறைக்கூறி முதல்முறையாக அரசியல் களத்தில் இறங்கிய விஜயகாந்த்-இன் தேமுதிக 232 இடங்களில் தனிப்போட்டியிட்டு 8.45% வாக்குகளைப் பெற்றது.
2001 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.