கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை.
எழுதவும் படிக்கவும் பழகிய சிறார்களிடத்தில் ஆரோக்யமான சமூக உரையாடல் அவசியமாகிறது. பாடப்புத்தகங்களை தாண்டிய, வாசிப்பு பழக்கம் சிறார்களின் ஆற்றல் வரம்பை விரிவடைய செய்கிறது.