துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்க வேண்டும் ; மதிமுக மகளிர் அணி தீர்மானம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதிமுக மாநில மற்றும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று (17.10.2021) காணொளி காட்சி வழியாக மாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர் ரொஹையா தலைமையில் நடைபெற்றது.

காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 36 மாவட்ட அமைப்பாளர் கலந்து கொண்டார்கள்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

மாநில மகளிர் அணி துணை செயலாளர் மல்லிகா தாயாளன் வரவேற்பு உரை நிகழ்த்தினார். இராணி செல்வின், கிரிஜா சுப்ரமணியம், கெளரி கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சந்திரா ஜெகநாதன் நன்றியுரை ஆற்றினார்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அனைத்து மாவட்ட மகளிர் அமைப்பாளர்களிடம் கலந்து ஆலோசனை செய்து ஒருமித்த முடிவாக கட்சியின் எதிர்கால நலனை கருதி துரை வைகோவிற்கு கட்சியில் பொறுப்பு தந்து இயக்கத்தை வலிமைபடுத்த வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

மறுமலர்ச்சி திமுகவின் அனைத்து மாவட்டங்களிலும் வைகோ மகன் துரை வைகோ கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி வரும் நிலையில் மகளிர் அணியினரும் காணொலிக் காட்சி வாயிலாக அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.