காலை சிற்றுண்டி திட்டம் – முதல்வர் பாராட்டிய ஓவியம் !

0

குளித்தலை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து வரைந்த ஓவியத்தை பார்த்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறமையை பாராட்டி ட்விட்டரில் வாழ்த்து.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்,அரசு நடு நிலைப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 25 ம் தேதி காலை முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க துவக்க விழா பள்ளியில் நடைபெற்றது.

முதல்வர் பாராட்டிய ஓவியம்
முதல்வர் பாராட்டிய ஓவியம்

துவக்க விழாவை முன்னிட்டு அதே பள்ளியில் பயிலும் மாணவர் கவின்குமார், மற்றும் மாணவி கார்த்திகா ஆகிய இருவரும் முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை ஓவியமாக வரைந்து முதல்வர் அமர்ந்து உணவு அருந்துவது போலவும், அவர் அருகில் உணவு அருந்தும் பள்ளி குழந்தைக்கு உணவு ஊட்டுவது போன்ற ஓவியத்தை வரைந்து இருந்தனர்.

இந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஓவியத்தை வரைந்த பள்ளி குழந்தைகளின் திறமையை பாராட்டி ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-நௌஷாத்

Leave A Reply

Your email address will not be published.