பிரபல பத்திரிகை குழுமம் கொடுக்கும் விருது நிகழ்ச்சிக்கு முதன்மை ஸ்பான்சர் அதானி என்பதால் விருதை மறுத்த கவிஞர் !
சுகிர்தராணி தமிழ் இலக்கிய சூழலில் வெகுவாக அறியப்படும் கவிஞராக இருக்கிறார். அடிப்படையில் இவர் இரு தமிழ் ஆசிரியர்.
`கைப்பிடித்து என் கவிதை கேள்’, `இரவு மிருகம்’, `அவளை மொழிபெயர்த்தல்’, `தீண்டப்படாத முத்தம்’, `காமத்திப்பூ’, `இப்படிக்கு ஏவாள்’ ஆகிய படைப்புகளை இயற்றியிருக்கிறார்.
தலித் விடுதலை, பெண் விடுதலை உள்ளிட்ட சமூக சீர்திருத்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பாக நடைபெற்று வரும் தேவி விருதுகள் என்ற பெண்களை அங்கீகரிக்கும் விழா மூலமாக சுகிர்தராணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட இருந்தது. இந்த நிலையில்… அவர் தன்னுடைய முகநூலில்… பிரபல பத்திரிகை குழுமம் கொடுக்கும் விருது நிகழ்ச்சிக்கு முதன்மை ஸ்பான்சர் அதானி என்பதால் விருதை மறுத்திருக்கிறார்..
