அரசு கட்டிடம் இன்றி அல்லாடும் திருவையாறு கிளை நூலகம் !
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனை மற்றும் தமிழ் இசைவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதோடு இசைக்கல்லூரி அரசர் கல்லூரி போன்ற கல்லூரிகள் ஆண்டுதோறும் நடைபெறும் ஏழூர் பல்லக்கு சப்தஸ்தானம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்வளவு பெருமை கொண்ட திருவையாற்றில், கிளை நூலககமாக தொடங்கப்பட்ட 1960 ஆம் ஆண்டு முதலாகவே வாடகை கட்டிடத்தில்தான் இயங்கி வருகிறது.
40,000-க்கும் மேற்பட்ட நூல்கள், 6000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட நூலகமாக, தினமும் 100-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகையுடன் இயங்கிவரும் நூலகமாக இருந்து வருகிறது. இந்த கிளை நூலகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் போட்டித் தேர்வுக்காக படிப்பதற்கென்றே கணிணி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இவ்வளவு இருந்தும் போதுமான இடவசதி இன்றி, மிகவும் மோசமான நிலையில் உள்ள வாடகை கட்டிடத்தில்தான் இயங்கிவருகிறது என்பது அவலமானது.
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தஞ்சாவூர் மாவட்ட அமைச்சரும் தொடர்ந்து ஐந்து முறையும் எம்.எல்.ஏ.ஆகவும் இருக்கும் துரை.சந்திரசேகரனும் கவனிப்பார்களா? என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எப்போது அடிக்கல் நாட்டுவிழா எம்.எல்.ஏ.சார்?
— தஞ்சை க.நடராசன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.