திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் – தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு, திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 18.10.2024 அன்று (வெள்ளிகிழமை) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

Kauvery Cancer Institute App

வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு முகாம்

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

மேலும், இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொண்டு இலவசதிறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி, பன்னிரெண்டாம் வகுப்பு,ஐ.டி.ஐ, இளநிலை மற்றும் முதுநிலைபட்டதாரிகள் மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற கல்வித் தகுதிகளையுடைய 18 வயதுமுதல் 40 வயதிற்குட்பட்ட வேலை நாடுநர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு (டீழை-னயவய), அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டைமற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்துகொண்டு, வேலை நாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை நாடுநர்கள்,  இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தகவல்களுக்குமாவட்டவேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தினைநேரிலோஅல்லது 0431-2413510இ 94990-55901 ரூ94990-55902 என்றதொலைபேசிஎண்களிலோதொடர்புகொள்ளலாம்எனதெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்   திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.