உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய -நெடுஞ்சாலையில் கலைஞர் உணவகம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“கலைஞர் உணவகம்” சர்ச்சைக்குரிய நெடுஞ்சாலை உணவகங்களில், அரசு பேருந்துகளை நிறுத்துவதற்கு தடை விதித்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரிய/வரவேற்புக்குரிய நடவடிக்கை, துறை அமைச்சருக்கு நன்றி.

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஒரே வழி, நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தொலைவுகளில் அரசே நேரடியாக நியாய விலை உணவங்களை ஏற்படுத்துவது தான். போக்குவரத்து துறையே இதை முன்னெடுக்கலாம். அல்லது சுற்றுலாத் துறை சார்பில் இதனை திறம்பட செயல்படுத்தலாம். ஆவின் பார்லர்கள் பல இடங்களில் சக்கைப் போடு போடுகின்றன, இவற்றை முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

Kauvery Cancer Institute App

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

கடந்த ஆட்சியில் நகரங்களில் அமைக்கப்பட்ட “அம்மா உணவகங்கள்” அடித்தட்டு மக்களுக்கும் – பேரிடர் காலங்களிலும் எப்படி சிறப்பான சேவையாற்றுகிறதோ அதைப் போன்று, அரசு நெடுஞ்சாலை உணவகங்களும் சிறப்பான சேவையை பயணிகளுக்கு நிச்சயமாக வழங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இத்திட்டத்தின் வழியாக அரசுக்கும் நல்ல வருவாய் கிட்டும். ஏராளமானோருக்கு நிரந்தர வேலைவாய்ப்புக்கும் வழியேற்படும். மதுக்கடைகளையே அரசு சிறப்பாக நடத்தி நிர்வகிக்கும் போது, உணவகங்களை நடத்துவது அவ்வளவு சிரமமில்லை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

” கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அரசு நெடுஞ்சாலை உணவகங்களை உடனடியாக அமைக்கலாம். அரசுக்கு மக்களிடத்தில் அபரிமிதமான நல்லாதரவும் இதன்வழி பெருகும். செய்வார்களா. என்று வி.என்.சரவணன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.