பேஸ்புக்கில் டிரேடிங் மோசடி!
புதுச்சேரியை சேர்ந்த ராஜகுமாரன் என்பவர் பேஸ்புக்கில் டிரேடிங் விளம்பரத்தை பார்த்து SBI-cap செக்யூரிட்டி எக்சேஞ்ச் குரூப் L1 என்ற நிறுவனத்தின் லிங்கை கிளிக் செய்து வாட்ஸ்அப் குருப்பில் சேர்ந்து உள்ளார்.
அதில் மஞ்சு பட்சிசா என்ற நிறுவனத்தின் லீடர் வாட்ஸப் கால் மூலம் தொடர்பு கொண்டு telegram குரூப்பில் சேர்த்து டிரேடிங் பற்றிய விவரங்களை அறிமுகப்படுத்தி 83% டிரேடிங்கில் லாபம் பெற்று தருகிறோம் என்று அவருக்கு ஆசை கூறி அந்த நிறுவனத்தில் புகார் தாரருக்கு முதலீடு செய்யக்கோரி மொபைலில் sbis2024 என்ற App லிங்க்-யை அனுப்பி பதிவிறக்கம் செய்யுமாறு கூறினார்.
பிறகு குரூப்பின் லீடரான மஞ்சு பட்சிசா வலியுறுத்தலின்படி மனுதாரர் ராஜகுமாரன் அவரின் பயன்பாட்டிற்கு வைத்திருந்த மூன்று பேங்க் கணக்கிலிருந்து ரூபாய் 54,42,500 மஞ்சு பட்சிசா கொடுத்த பந்தன் பேங்க், சரஸ்வதி பேங்க், கரூர் வைஸ்யா பேங்க், uco bank, அக்கவுண்டிற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார். இதற்கு முதலீடு செய்த பணத்திற்கு லாபம் வந்துள்ளதாக மொபைல் APP-ல் ரூபாய் 96,03,669/- காட்டிய படி உள்ளது. இந்த பணத்தை withdrawal செய்ய முயற்சித்த போது எந்த ஒரு பணமும் அவரது அக்கவுண்டிற்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
பின்னர் தான் இணைய வழி மோசடிக்காரர்கள் மூலம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் தியாகராஜன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதின் பெயரில் அந்த நபரை பற்றிய விவரங்கள் தெரியவந்தது அதன்பின் இதில் Cyber Tools மற்றும் latest technology மூலம் அஜிபுர் ரகுமான் பயன்படுத்தியது என்பதும் மேலும் அவர்கள், அஸ்ஸாம் பகுதியில் உள்ள மோரிகான் மாவட்டத்தில்
புராகான் பகுதியை சேர்ந்த நபர்கள் என்பது கண்டறியப்பட்டது. அதன்பின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைத்தானியா IPS (C&I) உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் Dr. S. பாஸ்கரன் PPS (Cyber Crime) வழிகாட்டுதலின்படி மற்றும் ஆய்வாளர்கள் S. தியாகராஜன், B.C. கீர்த்தி மேற்பார்வையில் உதவித் துணை ஆய்வாளர் சுதாகர் மற்றும் தலைமை காவலர் இருசவேல், காவலர் அரவிந்தன், காவலர் நந்தகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை குழு அமைத்து மேற்படி அசாம் விரைந்த சைபர் கிரைம் குழுவினர் அஜிபுர் ரகுமானை கைது செய்து (06.06.2025) காலை புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் கொண்டு வந்தனர்.

மேலும் அவரிடம் ஒரு சிம் கார்ட் மூன்று மொபைல் போன் wifi இன்டர்நெட் 2 லேப்டாப் இரண்டு லட்சம் பணம் பறிமுதல் செய்தனர் மேலும் அவரின் சகோதரர் வங்கி கணக்கில் இரண்டரை கோடி பணப்பரிவர்த்தனை மற்றும் 30-க்கும் மேற்பட்ட புகார்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் குற்றம் சாற்றப்பட்ட அஜிபுர் ரகுமானை புதுச்சேரி தலைமை நீதிமன்ற நடுவர் முன் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகளை கைது செய்ய உள்ளனர். அசாம் சென்று குற்றவாளி உடனடியாக கைது செய்த துணை உதவி ஆய்வாளர் சுதாகர், தலைமை காவலர் இருசவேல், காவலர்கள் அரவிந்தன், நந்தகுமார், ஹரி மற்றும் பெண் காவலர் ஐஸ்வர்யா ஆகியோர்களை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
இதன்மூலம், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா IPS, அவர்கள் பொதுமக்களுக்கு தெரிவிப்பது யாதெனில்,
- நீங்கள் வாட்ஸ்அப்/இன்ஸ்டாகிராம்/ஃபேஸ்புக்/ டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தெரியாத நம்பர்களிலிருந்து ஆன்லைன் வர்த்தகத்தைப் பற்றி வரும் செய்திகளை நம்ப வேண்டாம். இணைய வழி மோசடிக்காரர்கள் தங்களை வர்த்தக நிபுணர்கள் என்று கூறி உங்கள் பணத்தை திருடிவிடுவார்கள்.
- சமூக ஊடகங்களில் பகிரப்படும் சரிபார்க்கப்படாத தகவல்களை நம்ப வேண்டாம்.
- போலியான உடனடி கடன் செயலிகளை நம்ப வேண்டாம். இதுபோன்ற உடனடி கடன் செயலிகளை நீங்கள் உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்தால், அவர்கள் உங்கள் செல்போனில் உள்ள போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, அதனை மார்பிங் செய்து உங்கள் உறவினர்களின் தொலைபேசி எண்ணிற்கு மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பி உங்களை மிரட்டி பணம் பறிக்க தொடங்குவார்கள்.
- வாட்ஸ்அப் குழுக்கள், டெலிகிராம் குழுக்களிடமிருந்து வரும் ஆன்லைன் வர்த்தகம்(Trading , Cypto Currency, Bitcoin) தொடர்பான மெசேஜ் ஏதேனும் வந்தால், அதனை முற்றிலும் நம்ப வேண்டாம். சைபர் குற்றவாளிகள் போலியான வர்த்தக நிபுணராக ஆள்மாறாட்டம் செய்து உங்கள் பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சிப்பார்கள்.
- மும்பை காவல்துறை, CBI மற்றும் TRAI அதிகாரிகள் போன்ற அழைப்புகள் வந்தால், அதனை நம்ப வேண்டாம். சைபர் குற்றவாளிகள், மேற்கண்ட அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, உங்கள் செல்போன் நம்பர் அல்லது உங்கள் வங்கிக் கணக்குகள் சைபர் குற்றம்/ஹவாலாவில் ஈடுபட்டுள்ளதாக கூறி உங்களை மிரட்டத் தொடங்குவார்கள், மேலும் விரைவில் அவர்கள் உங்களைக் கைது செய்து, கைது செய்யாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுவார்கள்.
- மேலும், சைபர் குற்றம் தொடர்பான ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலும், ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தாலும் இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலைய இலவச தொலைபேசி எண் 1930, இணையதளம்: cybercrime.gov.in, லேண்ட்லைன்: 04132276144/9489205246 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.