டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
தென்னக ரயில்வேயில் நடைபெற்ற அங்கீகார சங்க தேர்தலில் வெற்றி பெற்ற டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கத்திற்கு, கூடுதலான எண்ணிக்கையில் கிளைகளை வழங்க வேண்டும். மத்திய அரசு 8-வது ஊதியக்குழு சமர்ப்பிப்பை விரைவுபடுத்த வேண்டும். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் பெற்று வந்த ‘மேனுவல் பேப்பர் பாஸ்’ முறையை ரத்து செய்துவிட்டு, ‘இ-பாஸ்’ ஆக மாற்றம் செய்ததை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டி.ஆர்.இ.யு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணைப் பொதுச்செயலாளர் ஏ. அருண்குமார் செழியன், கோட்டச் செயலாளர் ஆர். கரிகாலன், துணைப் பொதுச்செயலாளர்கள் எஸ். ராஜா, பி. கே. மாதவன், ஆர். சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், ஏ.ஐ.எல்.ஆர்.எஸ்.ஏ. அமைப்பைச் சேர்ந்த பி. கண்ணையன் நன்றி கூறினார். இதில் திரளான ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.




Comments are closed, but trackbacks and pingbacks are open.