திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பொதுமக்கள், பள்ளி / கல்லூரி மாணவ மாணவியர்கள், மற்றும் நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு தகுதி வாய்ந்த நீச்சல் பயிற்றுநரால் நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சி (Learn to Swim) கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

முதல் கட்டம்  : 01.04.2025  முதல் 13.04.2025 வரை

SVS வெறும் பிராண்ட் அல்ல - 4 தலைமுறை கடந்த பாரம்பரிய பிணைப்பு

இரண்டாம் கட்டம் : 15.04.2025  முதல் 27.04.2025 வரை

மூன்றாம் கட்டம் : 29.04.2025  முதல் 11.05.2025 வரை

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நான்காம் கட்டம்: 13.05.2025  முதல் 25.05.2025 வரை

ஐந்தாம் கட்டம்: 27.05.2025  முதல் 08.06.2025 வரை         

 

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

காலை 6.30 மணிமுதல் 9.30 மணி வரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கும் மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை மாணவியர்கள் மற்றும் பெண்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சிக்கானகட்டணம் ரூ.1500/- +GST18% (ஒரு நபருக்கு/ஒருமணி நேரம் 12 நாட்கள் வகுப்பு) Online – POS Machine வாயிலாக செலுத்தப்பட வேண்டும். 8 வயதிற்கு மேற்பட்டவர்கள் நீச்சல் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் (வயது சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்).

நீச்சல் வகுப்பு
நீச்சல் வகுப்பு

நீச்சல் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் /ஆண்கள் மற்றும் மாணவியர்கள் / பெண்கள் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

காலை 9.30 மணிமுதல் 12.30 வரைமற்றும் பிற்பகல் 2 மணிமுதல் 4 மணிவரைஆண்களுக்கும் மாலை 4.00 மணிமுதல் 5.00 மணிவரைபெண்களுக்கும் தினசரி கூப்பன் முறையில் வழக்கம் போல் நீச்சல் பயிற்சிமேற்கொள்ளலாம். ஒருமணிநேரத்திற்குகட்டணம் ரூ.50 /- + GST 18%  (ஒரு நபருக்கு / ஒரு மணி நேரம் மட்டும்)

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும், 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்   திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.