அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள் !
யூ டியூப் மற்றும்
சேனல் மீடியாக்களே
அவர்களின்
“அன்றாடங்களை”
அபகரிக்காதீர்கள்.
சமீபத்தில்
விஜய் டிவி யின் நீயா நானா நிகழ்ச்சியில்
மிக அற்புதமாகத்
தொகுத்து வழங்கி
அனைவரையும்
திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்
மிஸ்டர் கோபிநாத்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஒரு
கிராமத்தில்
வாழ்ந்து வருகிறது.
அந்த மிக எளிய
குடும்பம்.
எண்பது வயதினை
நெருங்குகின்ற
வணங்கத்தக்க
மிக எளிய மனுசி
சண்முகமம்மாள்.
தாய்ச் சொல் தட்டாத
இரண்டாவது மகன்.
அன்பு மலரான
அருமை மருமகள்.
மூவருமே
நம் மனதுக்கு
நெருக்கமானவர்கள்.
விஜய் டிவி யின்
நீயா நானா நிகழ்வு
ஒளிபரப்புக்குப்
பின்னர்
நம் தமிழ்கூறும்
நல்லுலகின்
யூ டியூபர்கள்
சேனல் மீடியாக்கள்
பலரும்
படையெடுத்துச்
சென்று
அவர்கள் மூவரையும்
நேர்காணலுக்கு
உட்படுத்தி
அக்கு வேறு
ஆணி வேறாகப்
பிய்த்துப் போட்டு
அவர்களது
வாழ்வியலை
ஒளிபரப்புச் செய்து
வருகின்றார்கள்.
அவர்களை
அவர்களாகவே
இருக்க விடுங்கள்.
அவர்களது
மிக எளிமையான
வாழ்க்கையின்
“அன்றாடங்களை”
அவர்களிடமிருந்து
அபகரித்து விடாதீர்கள்.
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு,
உழைக்கும் மூத்த பத்திரிகையாளர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.