தமிழகத்தில் 30-க்கும் அதிகமான ”பள்ளிகள் இல்லா கிராமங்கள்”

0

தமிழகத்தில் 30-க்கும் அதிகமான ”பள்ளிகள் இல்லா கிராமங்கள்” ! எங்கே போய்க் கொண்டிருக்கிறது, பள்ளிக் கல்வித்துறை ? – 

சட்டசபை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்தும், அரசுப்பள்ளிகளே இல்லாத கிராமங்கள் இருக்கும் அவலம் குறித்தும் எந்த அக்கறையும் கொள்ளாமல் இருப்பது வேதனையளிப்பதாக குறிப்பிடுகிறார், ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை.

https://businesstrichy.com/the-royal-mahal/

அமைச்சர் அன்பில் மகேஸ் - வா. அண்ணாமலை
அமைச்சர் அன்பில் மகேஸ் – வா. அண்ணாமலை

இந்த விவகாரம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் … “பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை! ஆசிரியர்கள் சங்கங்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீர்வு காண்பதாக ஒப்புதல் அளித்துள்ள 12 கோரிக்கைகளில் கணினி பணியாளர் நியமனத்தைத் தவிர வேறு எதையும் அறிவிக்கவில்லை! பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாடு எவரிடம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சூன் மாதம் 24ந்தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மான்யக் கோரிக்கையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அளித்த பதிலுரையில்-25 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகளில் 158 அறிவிப்புகளில் 143 அறிவிப்புகளை செயல்படுத்திக் காட்டியுள்ளோம் என்கிறார். இந்தியப் பெருநாடே புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்றவற்றை வரவேற்று பாராட்டுகிறார்கள். பின்பற்ற தொடங்கியுள்ளார்கள்.

திராவிடல் மாடல் ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எனக்கு இரண்டு கண்கள், ஒன்று கல்வி, இரண்டு சுகாதாரம் என்கிறார் மனம் நெகிழ வரவேற்கிறோம். பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறபோது நான்கு கால் பாய்ச்சல் என்கிறார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டுகிற போது அமைச்சரின் தந்தை இருந்தால் என்ன மகிழ்ச்சி அடைவாரோ அதைவிட மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பொறுப்பேற்றதற்குப் பிறகு சட்டப்பேரவையில் பதிலுரை பேச்சுத் தொகுப்பு வரவேற்று மகிழக் கூடியதாக உள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாகம் பின்னடைவை சந்தித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன? பல ஒன்றியங்களில் 50 முதல் 70 இடங்கள் வரை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன? பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன?

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சி என்ற பெயரால் இணையதள வழியைத் தவிர பள்ளி வேலை நாள், விடுமுறை நாட்களில் பயிற்சி இருக்காது என்றார் கல்வி அமைச்சர். ஆனால் ஆசிரியர்கள் இல்லாத ஒன்றியப் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றக் கூடிய பள்ளிகளில் பள்ளி வேலை நாட்களில் ஓர் ஆசிரியர் உள்ள பள்ளிகளில் 1,2,3 – மூன்று வகுப்புகளுக்கும் 4,5 வகுப்புகளுக்கும் அவரே பயிற்சியில் கலந்து கொள்ளும் நிலைமை தொடர்கிறது. மாற்றுப் பணிக்கும் ஆசிரியர்கள் பள்ளிகளில் இல்லை.

எதையும் கண்டு கொள்ளாத பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அரசாணை எண்.243, நாள் 21.12.2023 திருந்திய தெளிவுரை பள்ளிக் கல்வித்துறை மான்யக் கோரிக்கையில் இடம் பெறும் என்று எதிர்பார்த்தோம். எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்பதற்கான உறுதி அறிக்கையில் இடம் பெறவில்லை.

தொண்டு நிறுவனங்களை எல்லாம் பள்ளிகளை பார்வையிடும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படும் அறிவிப்பு இடம் பெறவில்லை.
எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்வதால் மாணவர்களில் கல்வி நலனில் பெருத்த பாதிப்பு ஏற்படும் என்பதை வலியுறுத்தியும், எவ்வித தெளிவும் அறிவிப்பில் இடம் பெறவில்லை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாநிலம் முழுவதும் பள்ளி வாரியாகச் சென்று வருவாய் துறை, ஊராட்சித் துறை என பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை அழைத்துச் சென்று மாணவர்ளை படிக்கச் சொல்லி மதிப்பீடு செய்யச் சொல்லுகிற நிலைமை கல்வித் துறையில் திராவிட மாடல் அரசினைத் தவிர சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து எந்த ஆட்சி காலத்திலும் இந்த சோதனை கல்வித் துறைக்கு வந்ததில்லை.

அறிஞர் அண்ணா அவர்கள் அறிமுகப்படுத்திய ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு அறிவிப்பினை பழைய நடைமுறைப்படி அமுல்படுத்துவோம் என்ற அறிவிப்பினை வெளியிடாதது ஏன்?

பயிற்சி முடித்து வந்த ஆசிரியர் நடத்தும் பாடத்தினை யார் சரிபார்ப்பது ? என்ன | அவமானம் கல்வித் துறைக்கு?
மதிப்புமிகு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களே!

கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களை, மாவட்டக் கல்வி அலுவலர்களையும், ஏனைய துறைகளை பார்வையிடும் வாய்ப்பினை அளித்து ஒருமுறை அதிகாரம் அளித்து சுற்றறிக்கை அனுப்புங்கள்.நெறிப்படுத்தச் செய்வார்கள்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலையுறாது மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமித்து அவர்தான் அவரது மனசாட்சி என்று அதிகாரபூர்வமாக அறிவித்து திருச்சி ஆசிரியர் இல்லத்தில் அலுவலகம் தந்து செயல்படுத்தி வருகிறார்? பெருமைபட்டு வருகிறார்?

பள்ளிக் கல்வித்துறை எங்கே போய்க் கொண்டிருக்கிறது? பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் சரியாக இருந்திருந்தால் பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக செயல்பாடுகள் ஆசிரியர்களின் நிலைமை, மாணவர்களின் கல்வி நலனுக்கு இவ்வளவு பெரிய சோதனை ஏற்பட்டிருக்காது? பள்ளிக் கல்வித்துறை மான்யக் கோரிக்கை என்றால்- புதிய தொடக்கப் பள்ளிகளை கிராமத்தில் தொடங்கும் அறிவிப்பினை வெளியிடுவார்கள்.

தமிழ்நாட்டில் சுமார் 30 கிராமங்களுக்கு மேலாக பள்ளிகள் இல்லாத கிராமங்களாக உள்ளன என்று தெரிகிறது?
பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் அறிவிப்பும் எதுவும் இல்லை!

தொடக்கப் பள்ளிகளை கூட தொடங்கும் அறிவிப்பினை மான்யக் கோரிக்கையில் இடம் பெறாதது திராவிட சத்தியம்!
திராவிட மாடல் அரசில் என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிந்து வைத்துள்ளாரா?
தீர்வை நோக்கி பயணங்கள் தொடரட்டும்!

நீட் தேர்வினை எதிர்க்கிறோம் நியமனத் தேர்வினை தொடர்கிறோம் என்ன நீதி? மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்வித் துறையினையும், பள்ளியில் ஆசிரியர்களை, மாணவர்களின் வாசிப்பு திறனை எவர் வேண்டுமானாலும் பார்வையிடலாம் என்பதை தடுத்து நிறுத்திட வேண்டுகிறோம்.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும்-முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் அன்புப் பார்வையிலும், இனமானப் பேராசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் வளர்ந்தவன் என்ற முறையிலும், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தாத்தா அஞ்சாநெஞ்சர் புரவலர் அன்பிலார் அவர்களை 1965ல் அழைத்துச் சென்று கூட்டம் நடத்தியவன் என்ற உரிமையிலும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

பள்ளிக் கல்வித் துறையின் மாண்பினையும் ஆசிரியர் பணியின் மேன்மையினை பெருமையினையும் பாதுகாத்திட வேணுமாய் பெரிதும் வேண்டுகிறோம்.உரிமை உறவுடன் ஆட்சி நலனில் அக்கறை கொண்டுள்ள இயக்கத்தின் மூத்தப் பொறுப்பாளர்.” என்பதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வா. அண்ணாமலை.

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.