எஸ்.எம்.எஸ். லாரி சர்வீஸ் இல்ல வரவேற்பு விழா !
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ்.எம்.எஸ். டிரான்ஸ்போர்ட் இல்லத் திருமண வரவேற்புவிழா, திருச்சி – தஞ்சை பிரதான சாலையில் அமைந்துள்ள காட்டூர் சிங்காரம் மஹாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக மாநகர செயலர் மு.மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, அமைச்சரின் நேர்முக உதவியாளர் பி.சேகர் அருண், பகுதி செயலாளர் ஏ.எம்.ஜி. விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் மண்டி சேகர்; வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, பொதுச்செயலர் கோவிந்தராஜூலு, மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன்.
திருச்சி மாவட்ட செயலர் ஸ்ரீதர், மற்றும் தொழிலதிபர்கள் மங்கள் அன்ட் மங்கள் மூக்கப்பிள்ளை, சாரதாஸ் உரிமையாளர் ரோஷன், பி.ஜி.நாயுடு அமர்நாத், கல்யாணி கவரிங் உமர்நாத், அமர் ஜூவல்லரி பாரஸ்மாத், ஏ1 ஹோட்டல் நிர்வாக இயக்குநர் ஆறுமுக பெருமாள், கே.எம்.எஸ். கல்யாண பிரியாணி நிர்வாக இயக்குநர் மைதீன், எஸ்.பி. கந்தன், ஆண்டாள் சீவல் ரெங்கநாதன், வெங்காய மண்டி தலைவர் தங்கராசு, கோணார் ரோடுவேஸ் பிரகாஷ் மற்றும் அங்குசம் செய்தியாளர் ரூபன்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
விழாவிற்கு வருகை புரிந்தவர்களை வி.ராஜ்குமார் – துளசிபாய், அழகர்சாமி – திலகேஸ்வரி தம்பதியினர் வரவேற்று மகிழ்ந்ததோடு, மனம் நிறைந்த விருந்துடன் உபசரித்தனர்.
— ஜி.பி.திருமாவளவன்