அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலா்கள் பணி நிறைவு பாராட்டு விழா
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்த உதவி மேலாளர் , முதுநிலை கண்காணிப்பாளர்கள் , கண்காணிப்பாளர் ஆகியோரது பணி நிறைவு பாராட்டு விழா இன்று திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் திரு.D. சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்த உதவி மேலாளர்( கணக்கு மற்றும் தணிக்கை பிரிவு )திரு .முத்துச்சாமி ,முதுநிலை கண்காணிப்பாளர்கள் (ஒழுங்கு நடவடிக்கை பிரிவு) திரு .சின்னதுரை நிறுவன பிரிவு திருமதி. மல்லிகா, கண்காணிப்பாளர் (எழுதுகோல் பிரிவு )திருமதி. செல்வகுமாரி, ஆகியோர் இன்று 31/05/2025 பணி ஓய்வு பெற்றனர்.
இவர்களுக்கு திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் பொதுமேலாளர் திரு.டி. சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. அனைத்து பணியாளர்களும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணை மேலர்கள் திரு. ராமநாதன், திரு. ஜூலியஸ் அற்புத ராயன், திரு.சாமிநாதன், திரு. ரவி மற்றும் உதவி மேலாளர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
செல்வக்குமாரி என் தங்கை. ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மகள். தகவலுக்கு நன்றி