போலீசுக்கு ரவுடி கொடுத்த “புல்லட்கள்”….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

போலீசுக்கு ரவுடி கொடுத்த “புல்லட்கள்”..

தமிழகத்தில் சமீபகாலமாக ரவுடிகள்  சாமியார் ஆடியோ விஷயங்களில் பிரபலமான மத்திய மாவட்டம்  அதில் தற்போது ஒரு பிரபல ரவுடி பஞ்சபாண்டவ போலீசாருக்கு “புல்லட்” வண்டிகள் அன்பளிப்பாக வழங்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருது.

Frontline hospital Trichy

தெய்வத்தை கூப்பிடுற மாதிரி அழைக்கப்படும் ரவுடி சமீபத்தில் கொலை, கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அந்நபரை சிபிசிஐடி மர்டர் கேஸ் விஷயமா வேற, தனியா விசாரித்து வராங்களாம்.

ஏன்னா பிடிபட்ட ரவுடி சாதாரண ஆள் இல்லையாம், தமிழ்நாடு, பாண்டிச்சேரி போன்றவைகளில் முகம் தெரியாமல் பல்வேறு மர்டர் வழக்குகளில் சம்மந்தபட்டவர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அப்படிபட்ட ரவுடி இவ்வளவு நாட்கள் பிடிபடாமல் எப்படி இருந்தான் என்கிற கேள்வி உயர்மட்ட அதிகாரிகளுக்கு எல தொடங்க, அதை  விசாரித்துள்ளனர் உயரதிகாரிகள்.

அப்போது காவல்துறை வட்டாரங்களிலேயே சில கருப்பு ஆடுகள் அந்த ரவுடியிடம் சிலபல பலன்களை வாங்கிக்கொண்டு காப்பாற்றி வந்துள்ளனர் என்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்மூலம் கடலோர மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக சேர்க்கப்பட்ட மாவட்டத்தில் விநாயகப்பெருமானை பெயரைக்கொண்ட மூத்த காவல் உதவி ஆய்வாளர் இந்த பிரபல ரவுடிக்கு உதவி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போன்று அந்த மாநகரில் உலாவரும் தனிப்படை போலிசார் பலருக்கு புல்லட் வண்டிகள் வாங்கி கொடுத்தாகவும் தகவல்கள் வெளிவந்தால்.. ரவுடியிடம் புல்லட் வண்டிகள் வாங்கிய போலிசார் யார் என்பதை விசாரிப்பதை ஆரம்பித்துள்ளனர் உயர் அதிகாரிகள்…

 

இந்தர்ஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.