அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது

திருச்சி திருவானைக்கோவில் ஐந்தாம் பிரகாரம் ஒட்ட தெரு மணமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் திருவானைக்கோயில் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார். 

2026 January 1- 7 ANGUSAM Book அங்குசம் வார இதழ்

இந்நிலையில் கடந்த 26/10/2020 மதியம் மர்ம நபர்களால் வீட்டின் வாசலிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் முருகன்
கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் முருகன்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 23/10/2020 அன்று இரவு திருச்சி திருவானைக்கோவில் பாரதி நகரைச் சேர்ந்த குணசேகரன் இவரது மனைவி பரமேஸ்வரி திருவானைக்கோவில் பகுதியில் கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பரமேஸ்வரி மற்றும் அவரது உறவினர் முருகன் ஆடுகளை திருட வந்ததாக தெரிய வருகிறது இது தொடர்பாக முருகன் கேட்டபோது தகாத வார்த்தையில் பரமேஸ்வரி திட்டியதுடன் அடிதடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பரமேஸ்வரி மற்றும் அவரது உறவினர் மீது முருகன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தங்களை அவமானப்படுத்தியதாக ஆத்திரமடைந்த பரமேஸ்வரி மற்றும் அவரது மகள் வழக்கறிஞர் முத்துலட்சுமி ஆகியோர் வெளியூரில் வேலை பார்த்து வந்த பரமேஸ்வரி மகன் வழக்கறிஞர் உடைய சகோதரருமான மணிகண்டன் உடனே வர கூறி பிரச்சனையை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் விதம் சம்பந்தப்பட்டவர்களை குடும்பத்தோடு கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

இதனால் தனது கூட்டாளிகளான அருண்குமார், ஹரிஹரன், செல்வகுமார், ராஜேஷ், கண்ணன், நரேஷ் குமார் மற்றும் 18 வயதுக்கு உள்ளன சிறுவர்களுடன் மணிகண்டன் முருகன் வீட்டிற்கு சென்று முருகனை சரமாரியாக வீட்டு வாசலுக்கு இழுத்துவந்து கழுத்து முதுகு கை என உடல் உறுப்புகள் அனைத்தையும் வெட்டி தனது ஆத்திரத்தை வெளிக்காட்டி உள்ளனர் இதில் பாதிப்படைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தடுக்கப் போன முருகனின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் கொலை முயற்சி செய்ததால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே கதறி அழுதுள்ளனர். மேலும் மேற்கண்ட குற்றவாளிகளுடன் சேர்த்து 11 பேர் இந்த கொலை சம்பவத்தில் கைதான நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பரமேஸ்வரி கணவர் குணசேகரன் அவரது மகள் முத்துலட்சுமி ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி ஆகியோர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது.

அதன்பேரில் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நேற்று 28/11/2020 கோவை மாவட்டம் ஆனைமலை சேட் லாட்ஜ் எனும் தனியார் விடுதியில் இருப்பது தெரியவந்து மேலும் அவர்களை அங்கு தங்க வைத்து அடைக்கலம் கொடுத்த பரமேஸ்வரியின் மருமகன் விக்னேஷ் குணசேகரன் தம்பி முத்துக்குமார் ஆதிய 5 நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்..

ஒரு அப்பாவி குடும்பத்தை நாசமாக்கிய நபர்கள் மீது காவல்துறை தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் வழக்கறிஞர் என்ற போர்வையில் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பெண்மீது வழக்கறிஞர்கள் சங்கம் அதிரடி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

மேலும் கொலை செய்த கும்பலுக்கும் திருச்சி திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரங்கன் உறவினர் என தெரியவருகிறது..

 

ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.