சேலம் அருகே பெருமாள் கோயிலில் 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளை!

0

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாரமங்கலத்தில் உள்ள சாவடி தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள பூவேல்நாடு மகாஜனத்திற்கு சம்பந்தப்பட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் பழங்கால ஐம்பொன் சிலைகளான ஸ்ரீதேவி, பூதேவி,மூலவரான பெருமாள் மற்றும் உற்சவ மூர்த்திகள் உள்ளிட்ட எட்டு சிலைகள் நேற்று இரவு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

https://businesstrichy.com/the-royal-mahal/

இன்று வழக்கம் போல் காலை கோவிலில் பூஜைகள் செய்வதற்காக பூசாரி வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த எட்டு ஐம்பொன் சாமி சிலைகள் காணாமல் இருந்தது தெரியவந்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனை அடுத்து தாரமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,சம்பவ இடத்திற்கு ஓமலூர் துணை கண்காணிப்பாளர் சங்கீதா,ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள தாரமங்கலம் பகுதியில், பழங்கால எட்டு ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

சிற்பக் கலைகளுக்கு உதாரணமாக திகழும் தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அருகே இந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு நடைபெற்ற ஐம்பொன் சிலை கொள்ளை சம்பவம் பக்தர்கள் மத்தியில் வரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

-சோழன் தேவ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.