அன்பில் தர்மலிங்கம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 107-வது பிறந்தநாள் விழா:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 107-வது பிறந்தநாள் விழா இன்று திருச்சியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தந்தை பெரியாரின் பாசத்தில் வளர்ந்தவரும், பேரறிஞர் அண்ணாவின் இதயம் கவர்ந்த தம்பியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நம்பிக்கைக்குரிய நண்பருமான அன்பிலார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில்மு. மதிவாணன் – மாநகரக் கழகச் செயலாளர். மாநிலங்கள் அவை உறுப்பினர் கவிஞர் சல்மா, வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்.கோவிந்தராஜ் மாவட்ட அவைத் தலைவர்.செந்தில் மா நில அணி அமைப்பாளர்.மோகன் பகுதி கழகச் செயலாளர்.
மேலும், இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு புரவலர் அன்பிலாரின் புகழுக்கு மரியாதை செலுத்தினர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.