அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தூய சக்திக்கு அழகல்ல!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

அமுதா ஐஏஎஸ் ஒரு சிறந்த ஆளுமை மிக்க நேர்மை வாய்ந்த அதிகாரி. அவர் ஓசூர் உதவி ஆட்சியராக தருமபுரி மாவட்ட ஆட்சியராக திறம்பட பணி புரிந்தவர்.

திட்டப் பணிகளில் ஊழல் நடைபெறாமல் சிறந்த முறையில் நிர்வாகம் செம்மையாக நடைபெற பாடுபட்டவர். அரூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மக்கள் கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை ஏற்று வளர்ச்சி கோரிக்கைகளை ஏற்று அமலாக்கிட முயற்சிகள் மேற்கொண்டவர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

2008- ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியில் நடைபெற்ற சாலைப் பணியை ஆய்வு செய்த போது கட்டுமான பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பதைக் கண்டறிந்த அவர் உடனடியாக அவற்றை அகற்றி விட்டு தரமான கட்டுமான பொருட்களைக் கொண்டு சாலை அமைக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது அதனை அகற்றுவதாக ஒப்புக் கொண்ட ஒப்பந்ததாரர் பின்னர் இரவு நேரத்தில் அதே தரமற்ற பொருட்களை கொண்டு சாலை அமைத்தார். இதனை அப்போது செய்தியாளராக பணியாற்றிய நான் போட்டோ எடுத்து ஊடகத்தில் செய்தி வெளியிடச் சென்ற என் மீது  ஒப்பந்ததாரர்களின் அடியாட்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத்தொடர்ந்து தாக்கப்பட்ட நான் தருமபுரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அமுதா அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி என்னிடம் நலம் விசாரித்தார். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கும் பேரூராட்சித் துறை  அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டதின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அமுதா ஐஏஎஸ்
அமுதா ஐஏஎஸ்

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

ஒகேனக்கல் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் சிறப்பாகச் நடத்தி திட்டப்பணிகள் விரைந்து நிறைவேற்ற ஊக்கமாக செயல்பட்டவர். பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில் பெண் கல்வி மேம்பட பள்ளிகளில் மாணவிகளுக்கு நேப்கின் விநியோகிக்கும் இயந்திரம் வழங்கும் முன்னோடி திட்டத்தை பில்கேட்ஸ் மனைவி நடத்திய சேவை நிறுவன உதவி மூலம் பரீட்சார்த்த மாக் அமுல் படுத்தினார்.

ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தில் வண்ணமீன் காட்சி உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட மேம்பாடு பணிகளை மேற்கொண்டவர். அரசு செயலராக பணியாற்றிய போது தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பெரு முயற்சி மேற்கொண்ட அதிகாரி.

HARINI JEWELLERS TRICHY

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் அவரது இறுதி நிகழ்ச்சியை நடத்த பொறுப்பளிக்கப்பட்டு திறம்பட செய்து முடித்தவர்.

குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும்  நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசாரிடமே லஞ்சம் வாங்கும் ஆட்சியர்கள்,  பஞ்சாயத்துகளில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களை ஒட்டுமொத்தமாக தங்கள் உறவினர்களிடம் கொள்முதல் செய்வது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் பணியமர்த்தப்பட்டுள்ள சூழலில் விடுதலைப்போராட்ட தியாகி குடும்பத்தில் பிறந்த நேர்மையான திறமையான மூத்த பெண் அதிகாரி அமுதா அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது தூய ஆட்சி நடத்துவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்து பொறுப்பேற்றுள்ள தூய சக்திக்கு அழகல்ல!

 

வே.விசுவநாதன்

மாவட்ட தலைவர்

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ்

தருமபுரி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.