‘தன்னலமற்ற சேவை’ என்ற அழியாத உணர்வுதான் ரோட்டரி !
ரோட்டரி இண்டர்நேஷனலின் துணைத்தலைவரும் நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரும்; எக்ஸெல் குழுமங்களின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் தென்கொரியாவின் சியோல் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆர்.ஐ. மாவட்டம் 3640 ரோட்டர் தலைவர்களுடனான சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார்.
இந்த சந்திப்பு குறித்து, ” அன்பான உபசரிப்பால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். மாவட்டம் 3640-இன் ரோட்டேரியன்கள் சமூகத்திற்குச் சேவை செய்வதில் காட்டிய உற்சாகமும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாகவும் பெரிதும் பாராட்டத்தக்கதாகவும் உள்ளது. ரோட்டரி, ஒற்றுமை, கருணை மற்றும் நோக்கமுள்ள செயல்கள் மூலம் தொடர்ந்து வாழ்க்கையில் உத்வேகம் அளிக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ரோட்டரியின் உன்னதமான இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்வோம்; மேலும், ‘தன்னலமற்ற சேவை’ என்ற அழியாத உணர்வை பெருமையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து நிலைநிறுத்துவோம்.” என்பதாக, நெகிழ்வோடு பகிர்கிறார், எம்.எம்.எம். முருகானந்தம்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.