SDPI கட்சியின் 18 ஆம் ஆண்டு துவக்க விழா!
லால்குடி சாந்தி நகர் பகுதியில் SDPI கட்சியின் 18 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் கொடி ஏற்றி திருச்சி வடக்கு மாவட்டத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி திருச்சி வடக்கு மாவட்டத்தின் தலைவர் ஜவகர் அலி தலைமையில் நடைபெற்றது.மாவட்டத்தினுடைய துணைத் தலைவர் அசாருதீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் மாநில செயலாளர் சபிக் அஹமத் கட்சியின் கொடி ஏற்றி மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்
மாநில வர்த்தக அணி உடைய செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா மண்டல செயலாளர் நியாமத்துல்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் விமன் இந்தியா மூமென்ட் உடைய நிர்வாகிகள் ஏனைய கட்சி உறுப்பினர்கள் செயல்விரர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசியல் பயிலாரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத்தினுடைய ஐடி விங் தலைவர் ஹக்கீம் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.
— சதா






Comments are closed, but trackbacks and pingbacks are open.