ஊழல், லஞ்சத்துக்கு எதிராக காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் மெயின்கார்டுகேட் நுழைவாயிலில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி கையெழுத்து பெறப்பட்டது.
முன்னதாக சிறுபான்மைபிரிவு முதன்மை மாநில அதுணை தலைவர் என்ஜினீயர் பேட்ரிக் ராஜ்குமார், அமைப்புசாரா மாநில தலைவர் மகேஸ்வரன், முன்னால் ராணுவ அணி மாநில தலைவர் ராஜசேகரன், பொருளாளர் முரளி ஆகியோர் நோக்கவுரையாற்றினார்.
நிகழ்வில் கோட்ட தலைவர்கள் ராஜா டேனியல் ராய்,வெங்கடேஷ் காந்தி, கனகராஜ், பாக்கியராஜ், கோபி, தர்மேஷ், பகதுர்ஷா, பிரியங்கா பட்டேல் , அழகர், பாலு, மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத், விமல், அணித்தலைவர்கள் மகிளா ஷீலா செலஸ், அஞ்சு, அமைப்பு சாரா மகேஷ், இலக்கியம் பத்மநாபன், மருத்துவரணி கோகுல், மாணவர் காங்கிரஸ் நரேன், மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், வார்டு தலைவர்கள் யோகநாதன், வெங்கடேஷ், ரஃபிக், விஜயலட்சுமி, பூபாலன், கண்ணன், சுல்தான் பாட்சா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.