சில நேரங்களில்.. சில மனிதர்கள் !
ஒரு வணிகப் பயணத்தின் போது என் wallet காணாமல் போனதால், அது திருடப்பட்டதாகப் புகார் அளித்தேன். என் வங்கி கார்டுகள் அனைத்தையும் ரத்து செய்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
10 நாட்கள் கழித்து, எனக்கு அஞ்சலில் ஒரு பார்சல் வந்தது. அதற்குள் என் மணிபர்ஸ், உட்பட எல்லா வங்கி அட்டைகளுடனும் பணத்துடனும் அப்படியே இருந்தது. திருப்பி அனுப்பும் முகவரி எதுவும் இல்லை, கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்பு மட்டுமே இருந்தது.
அதில், “விமான நிலையத்தில் ஒரு இருக்கைக்கு அடியில் இதைக் கண்டெடுத்தேன். உங்களை எப்படித் தொடர்புகொள்வது என்று எனக்குத் தெரியாததால், உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரிக்கு இதை அஞ்சலில் அனுப்பினேன்” என்று எழுதப்பட்டிருந்தது.
அதன் கீழே இன்னொரு வாக்கியம் இருந்தது:
“இப்போது எனக்கு அந்தப் பணம் மிகவும் தேவைப்பட்டதால், அதை நானே வைத்துக்கொள்ள நினைத்தேன். ஏனோ அப்படி செய்யவில்லை. ஆனால் அப்படிச் செய்யாததில் எனக்கு மகிழ்ச்சி.”
அந்தக் குறிப்பைப் பிடித்தபடி நான் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்திருந்தேன்.
அந்தப் பணம் என்னிடம் வராமல் போயிருக்கலாம். அந்த wallet குப்பையில் போய்ச் சேர்ந்திருக்கலாம்.
ஆனால், தனக்குச் சொந்தமில்லாத ஒரு பொருளைத் திருப்பிக் கொடுப்பதுதான், அதிலிருந்து தனக்கு என்ன கிடைக்கும், என்பதை விட முக்கியம் என்று ஒரு நல்ல மனிதன் முடிவு செய்திருக்கிறான்.
சில நேரங்களில்.. சில மனிதர்கள்…
— அஜய்குமார் பெரியசாமி







Comments are closed, but trackbacks and pingbacks are open.