குழந்தைகளாக மாறிய தாத்தா – பாட்டிகள் !
என்னதான் நாளுக்கு ஒரு தினம் என அனுசரித்தாலும், அவை பெரும்பாலும் சடங்குத்தனமான நடைமுறையாக மாறிவிட்டது என்பதுதான் யதார்த்தம். அந்த தினத்தின் உண்மையான பொருள் அறிந்து கடைபிடிப்பதென்பது அரிதிலும் அரிதானது. ஆனால், இதற்கு மத்தியில்தான் உள்ளார்ந்த பிணைப்போடு, செப்டம்பர்-12 தாத்தா – பாட்டிகள் தினத்தை கொண்டாடி அசத்தியிருக்கிறது, திருச்சியில் பெட்டவாய்த்தலையில் இயங்கிவரும் ‘சேவை சாந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி. இது, தமிழகத்தின் சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருதை பெற்ற சேவை – கோவிந்தராஜ் நிர்வகிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி என்பது கூடுதல் சிறப்பு.
வண்ணமயமான பலூன்கள், மலர்கள் மற்றும் குழந்தைகளால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளால் மிளிர, மழலையர் வகுப்பின் குட்டி நட்சத்திரங்கள், தங்கள் தாத்தா-பாட்டிகளுக்காகப் பாடிய பாடல்கள், ஆடிய நடனங்கள் மற்றும் இனிமையான பேச்சுக்கள் என விழாக்கோலம் கண்டது பள்ளி வளாகம். நிகழ்வில் பங்கேற்ற தாத்தா – பாட்டிகளிடமிருந்து சிதறிய சிரிப்பொலிகளாலும் அவர்களிடத்தில் வெளிப்பட்ட மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக அந்த வளாகத்தை மட்டுமல்ல; இந்த செய்தியை வாசிக்கும் நம்மையும் சேர்த்தே ஆழ்த்திவிட்டது, இந்நிகழ்வு.
— கோவிந்த்





Comments are closed, but trackbacks and pingbacks are open.