பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி !

 

வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து, தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் ஏப்ரல் 24-ந் தேதி தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

 

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

நாடாளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 7-வது இறுதி கட்டமாக மே 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

 

மோடிக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதனால் இந்த தொகுதியில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை.

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனால் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிட முடிவு செய்து உள்ளனர்.

 

இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது

 

விவசாய விளைபொருட் களுக்கு லாபகரமான விலை கிடைக்கவேண்டும், விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், 60 வயது பூர்த்தியான விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், தனிநபர் காப்பீடு வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் எனது தலைமையில் 141 நாட்கள் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

 

தற்போது, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், நான் உள்பட தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிட இருக்கிறோம்.

 

இதற்காக நாங்கள் வாரணாசிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 22-ந் தேதி ரெயிலில் புறப்பட்டு செல்கிறோம். 24-ந் தேதி காலை வாரணாசியை சென்றடைந்து விடுவோம். அன்றைய தினமே அங்கு எங்களுடைய வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இருக்கிறோம். பின்னர், அங்கு வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்வோம்.

 

வேட்பு மனு தாக்கலின் போது ஒரு சுயேச்சை வேட்பாளரின் பெயரை 10 பேர் முன்மொழிய வேண்டும் என்பதால், அதற்கான ஏற்பாட்டையும் செய்து இருக்கிறோம். அத்துடன் பிரசாரம் செய்வதற்காக 300 பேரையும் வாரணாசிக்கு அழைத்துச்செல்ல இருக்கிறோம்.

 

வாரணாசி செல்வதற்காக ரெயிலில் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவும் செய்யப்பட்டு விட்டது.

 

இவ்வாறு அவர் கூறினார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.