அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ரெயிலில் 30 கிலோ கஞ்சா கடத்திய பெண் திருச்சியில் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

ரெயிலில் 30 கிலோ கஞ்சா கடத்திய பெண் திருச்சியில் கைது !

 

கடந்த சில நாட்களாக ரெயில்களில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்த நிலையில் நேற்று அதிகாலை அரியலூர் ரெயில் நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் சோதனை மேற்கொள்ள ஆயத்தமானார்கள். அப்போது சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

30 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

 

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதன்பேரில், அரியலூர் ரெயில் நிலையம் வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி போதை பொருட்கள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம், திருச்சி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமலைராஜா ஆகியோர்  தலைமையிலான குழுவினர் மற்றும் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ஒவ்வொரு பெட்டியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவில்லா பெட்டி ஒன்றில் பெண் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை கடத்தி செல்வது தெரியவந்தது.

 

ரெயில், திருச்சி அருகே ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தை கடந்த நிலையில், ரெயில் பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை இழுத்து போலீசார் திடீரென ரெயிலை நிறுத்தினர். இடையில் ரெயில் திடீரென நின்றதும் ரெயில் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

 

அதே வேளையில் ரெயில் நின்றதும், கஞ்சா பொட்டலங்களுடன் பயணித்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அயோத்திபட்டியை சேர்ந்த பால்ராஜ் மனைவி ராஜகொடி (வயது 53) என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி வந்த 30 கிலோ கஞ்சா பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டன.

 

தொடர்ந்து விசாரணை

 

விசாரணையில், அவர் சென்னையில் இருந்து ஆந்திராவை சேர்ந்த நபர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை வாங்கி கொண்டு மதுரைக்கு கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் ராஜகொடி, சென்னையில் கஞ்சா பொட்டலங்களை பெற்ற ஆந்திராவை சேர்ந்த நபர்கள் யார்? எனவும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.