” ஏழை “நகராட்சியா..? நகர்மன்ற கூட்டத்தில் ஆணையரின் பதிலால் அதிர்ச்சி…! நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாவட்டத்திற்கே இந்த நிலைமையா..?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

” ஏழை “நகராட்சியா..? நகர்மன்ற கூட்டத்தில் ஆணையரின் பதிலால் அதிர்ச்சி…! நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாவட்டத்திற்கே இந்த நிலைமையா..?

 

நகராட்சி சாதாரணக் கூட்டம்
நகராட்சி சாதாரணக் கூட்டம்

 

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் செல்வராணி தலைமை வகித்தார்,துணைத் தலைவர் முரளி முன்னிலை வகித்தார். ஆணையர் சுரேஷ்குமார் வரவேற்றார்.இக்கூட்டத்தில் மன்றப் பொருள்களின் மீது விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய1-வது வார்டு உறுப்பினர் லலிதா , தனது வார்டில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை எனவும் , இதனால் அதிருப்தியில் பொதுமக்கள் தனது வீட்டிற்கு வந்து முறையிடுவதாகவும் , தெருவிளக்கு, குடிநீர் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.16-வது நகர்மன்ற அதிமுக உறுப்பினரான சந்திராவும் தண்ணீர் டேங்க் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவை என கோரிக்கை விடுத்தார்.அதற்கு பதிலளித்த ஆணையர் சுரேஷ்குமார், ” துறையூர் நகராட்சி ஏழை நகராட்சியாக உள்ளது.

ஆணையர் சுரேஷ்குமார்
ஆணையர் சுரேஷ்குமார்

 

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தற்போதைக்கு எவ்வித பணியும் செய்ய முடியாத நிலையில் உள்ளதால் நிதிநிலை மேம்பட்டவுடன் உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பதில் கூறினார். ஆணையரின் இந்த பதிலால் ஆளும் கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் , திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்து , எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக துணைத் தலைவர் முரளி ஆணையரிடம் , “ஏழை நகராட்சி என எப்படி சொல்லலாம். ஏழை நகராட்சியை பணக்கார நகராட்சியாக மாற்றுவது தான் அதிகாரியின் வேலை எனவும், வரியை நிலுவையில்லாமல் வசூலிக்க வேண்டும் , வருமானத்தைப் பெருக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அதற்குண்டான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், மீண்டும் ஒருமுறை இப்படி பதில் கூறக் கூடாது என ஆணையருக்கு அறிவுறுத்தினார். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திருச்சி மாவட்டத்தில் இருப்பதாலும், அவரது மாவட்டத்தில் உள்ள நகராட்சியை , “ஏழை “நகராட்சி , “பணமில்லாத “நகராட்சி என நகர்மன்றக் கூட்டத்திலேயே துணிவாக பதிலளித்த துறையூர் நகராட்சி ஆணையரான சுரேஷ்குமாரை அதிமுக நகரச் செயலாளரும் , 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான அமைதி பாலு உள்ளிட்ட அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சி கலந்த வியப்புடன் பார்த்தனர். ஆணையரின் பதில் துறையூர் நகராட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.