பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யமாட்டோம்- டாஸ்மாக் ஊழியர்கள் தீர்மானம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சங்க டாஸ்மாக் ஊழியர்கள் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யமாட்டோம் !

பணி நிரந்தரம், அரசு ஊழியர் சலுகை’ ஒய்வூதியம் வழங்க திருப்பரங்குன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மண்டல கூட்டம்
திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க மண்டல கூட்டம்தனியார் மகாலில்நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் முருகன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.

Sri Kumaran Mini HAll Trichy

மாநில சிறப்பு தலைவர், சட்ட அலோசகர் பாரதி தலைமை வகித்தார் கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் ஒய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்திடவும் டாஸ்மாக் உள்ளிட்ட அரசுத்துறையில் ஒப்பந்த துறை பணியாளர்களை தவிர்த்து நேரடி நியமனம் பள்ளி மாணவர்களுக்கு மதுவிற்பனை தடை செய்வது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுஇது குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்க தலைவர் பாரதி கூறுகையில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனை நலச் சங்கத்தின் உடைய மதுரை மண்டல நிர்வாகிகளுடைய கூட்டம் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.

Flats in Trichy for Sale

தமிழக அரசு ராஜஸ்தான், ஒரிசா,பஞ்சாப் போன்று தமிழ்நாட்டிலே ஒப்பந்த தொழிலாளர்மயத்தை ஒழித்து கட்டி பத்தொன்பது ஆண்டுகளாக தமிழகத்தினுடைய நிதிச் சுமையை தாங்கி பிடித்து ஆண்டுக்கு 36,000 கோடி நிதி வருவாய் அள்ளித்தரும் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து வருகின்ற ஜனவரி 26 முதல் மாநில மாநாட்டை நாங்கள் நடத்த இருக்கிறோம் எங்களுடைய கோரிக்கை என்பது தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறோம்அப்படி இல்லாவிடில் சிறை நிரப்புப் போராட்டம் உட்பட கடையடைப்பு போராட்டம் உள்பட அடுத்தடுத்த போராட்டங்களை நடத்துவதற்கும் எங்களுடைய தமிழ்நாடு டாஸ்மாக் நல சங்கம் தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மருத்துவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூடிய டாஸ்மாக் குழுவினுடைய வருமானம் என்பது பிடித்தம் போக பத்தாயிரம் சம்பளம் அதிகாரிகள் அத்தனை பேருக்கும் அவர்களுக்கு மாதம் வந்து கடை வாடைக்கு உட்பட அட்டைப்பெட்டி கட்டணம் உட்பட அத்தனை விதமான கட்டணங்களையும் தவிர்க்க முடியாத விஷயமா இருக்குஇந்த பணியாளர்கள் அத்தனை பேரையும் பணியில் படுத்தி அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கி அவர்களுக்கு ஓய்வூதிய உட்பட வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலங்களில் சீருடையில் வரும் பள்ளி மாணவர்களுக்கு மதுவிற்பனை சர்ச்சை குறித்துபள்ளி மாணவர்களுக்கு மதுபானங்களை விற்பது என்பது தவறான விசயம். எங்கள் கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யமாட்டோம் என தலைவர் பாரதி கூறினார்.

– சாகுல் மதுரை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.