மணிப்பூர் கலவரம்: ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மணிப்பூர் கலவரம்:
ஒன்றிய பாஜக அரசைக்
கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டத் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் கோ.சக்திவேல், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் வீரமோகன், பக்கிரிசாமி, இராமச்சந்திரன், சேவையா, கிருஷ்ணன், விஜயலட்சுமி, ஏஐடியூசி நிர்வாகிகள் கோவிந்தராஜன், அன்பழகன், துரை.மதிவாணன், பேராசிரியர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

மூத்த தலைவர் ஜி.கிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். முடிவில், மாநகர துணைச் செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் நன்றி கூறினார்.

மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக மெய்;த்திக் இன மக்களுக்கும் குக்கி மற்றும் நாக பழங்குடி இன மக்களுக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அம்மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இக் கலவரத்தில் சுமார் 250க்கு மேற்பட்ட தேவாலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இரு தரப்பிலும் 150க்கு மேற்பட்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர் கலவரத்தினால் சொந்த மாநிலத்திலேயே அம்மக்கள் அகதிகளாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.