வண்டியில ஏறு … உன்மேல கஞ்சா கேஸ் போடனும் … ஓ.சி. சர்வீசுக்காக மிரட்டிய எஸ்.ஐ. !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை மாவட்டம் அருகே உள்ள வாடிப்பட்டி பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனத்தை இலவசமாக பழுது நீக்க கூறி ஒர்க்ஷாப் உரிமையாளரை மிரட்டி தாக்கிய காரில் ஏற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பான நிலையில், தற்போது சர்ச்சைக்குள்ளான எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஓ.சி. சர்வீசுக்காக மிரட்டிய எஸ்.ஐ.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ராயல் என்ஃபீல்டு இரு சக்கர வாகன பழுது நீக்கும் ஒர்க் ஷாப் வைத்திருப்பவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

மூன்றாண்டுகளுக்கு முன்பு அதே வாடிப்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த அண்ணாதுரை, சீனிவாசன் வைத்திருக்கும் ஒர்க்ஷாப்பில் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கை பழுது பார்க்க கொடுப்பது வழக்கம். லேபர் சார்ஜ் மட்டுமன்றி, வாகனத்திற்காக மாற்றும் உதிரி பாகங்களுக்கான தொகையையும் கொடுப்பதில்லையாம். அந்த வகையில், 8600 ரூபாய் அளவுக்கு பழைய பாக்கியே கொடுக்காமல் இருக்கும் நிலையில், மீண்டும் வாகனத்தை பழுது நீக்க கொடுத்திருக்கிறார்.

ஓ.சி. சர்வீசுக்காக மிரட்டிய எஸ்.ஐ.
ஓ.சி. சர்வீசுக்காக மிரட்டிய எஸ்.ஐ.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அதுவும், தற்போது பாலமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியிடமாறுதல் பெற்ற பிறகும் தொடர்ந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, தனது காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்றொரு காவலர் மூலம் தனது இருசக்கர வாகனத்தை கொடுத்து ஒர்க்ஷாப்பில் பணிசெய்ய கூறியுள்ளார்.

அவரும் அந்த வாகனத்தை ஒர்க்ஷாப்பில் பழுது நீக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால், சீனிவாசன் பழைய பாக்கி இருப்பதாகவும், பழைய பாக்கி தந்தால் மட்டுமே வேலை பார்ப்பதாகவும் கூறி வேலை பார்க்காமல் இருந்துள்ளார்.  பின்பு அண்ணாதுரை தொடர்ந்து சீனிவாசனை தொலைபேசியில் அழைத்து வாகனத்தை வேலை பார்க்குமாறு தொடர்ந்து அழைத்துள்ளார்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

ஓ.சி. சர்வீசுக்காக மிரட்டிய எஸ்.ஐ.சீனிவாசன்  அண்ணாதுரை அழைப்பை எடுக்காததால் கோபம் அடைந்த உதவி ஆய்வாளர் அண்ணாதுரை கடந்த நான்காம் தேதி மதியம் 2:30 மணிக்கு பதிவு எண் தெரியாத வாகனத்தில் சீனிவாசனின் ஒர்க் ஷாப்பிற்கு சென்று சீனிவாசனை வாகனத்தில் ஏறுமாறு மிரட்டி அவரைத் தாக்கி என் வாகனத்தையா வேலை பார்க்க மாட்டாய் உன் மீது கஞ்சா வழக்கு போட்டுடுவேன் என மிரட்டி வாகனத்தில் ஏற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தற்போது சீனிவாசனை தாக்கி அண்ணாதுரை வாகனத்தில் ஏற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சீனிவாசன் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர், முதல்வர் தனிப்பிரிவு, மனித உரிமை கழக ஆணையம் என பல்வேறு துறைக்கு புகார் மனு அளித்து உதவி ஆய்வாளர் அண்ணாதுரையின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருக்கிறார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காவல்துறை உதவி ஆய்வாளர் தனது இருசக்கர வாகனத்தை இலவசமாக பழுது நீக்குமாறு ஒர்க்ஷாப் உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தித்து பாதிக்கப்பட்டவர் மனு கொடுத்திருந்தார்.

இதனையடுத்து, தற்போது சம்பந்தபட்ட உதவி ஆய்வாளர் அண்ணாதுரையை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

 

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.