பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்க காவல்துறை சார்பாக ”சென்னை 1930 விழிப்புணர்வு நடைபயணம்”

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்றப்பிரிவு சார்பில் எதிர்வரும் 29 ஜனவரி 2025 அன்று மெரினா கடற்கரை சாலையில் மாலை 5:00 மணிக்கு “சென்னை 1930 விழிப்புணர்வு நடைபயணம்” நடத்தப்படவிருக்கின்றது. இது, இணையத்திலுள்ள சைபர் குற்றங்களின் தடுப்பு பற்றியும் மற்றும் அதனை சமூகத்தில் பாதுகாப்பான ஆன்லைன் செயல்பாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

விழிப்புணர்வு நடைபயணம்
விழிப்புணர்வு நடைபயணம்

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

இந்த விழிப்புணர்வு நடைபயணமானது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துவகை நபர்களையும் சேர்த்து சைபர் குற்றத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கும்.

இந்த நிகழ்ச்சி, சைபர் குற்றங்களை குறித்து மக்களை விழிப்புணர்வுபடுத்தி, தனிப்பட்ட  தகவல்களை பாதுகாப்பதில் மற்றும் ஆன்லைன் தனியுரிமையை பராமரிப்பதில் உதவும் வழிகாட்டல்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இணையவழி குற்றப்பிரிவு, அனைவருக்கும் பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்க ஆர்வமாக செயல்படுகிறது மற்றும் இன்றைய இணைய உலகில் எச்சரிக்கையாகவும், அறிவுணர்வுடன் இருக்க வேண்டிய அவசியத்தை முக்கியமாக நினைவூட்டுகிறது.

பொதுமக்கள் இந்த முக்கியமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்க அழைக்கின்றோம். அனைத்து பங்கேற்பாளர்களுக்கு நடைபயணம் முடித்தவுடன், பங்கேற்புக்கான அடையாளமாக “பிளாக்செயின் மூலம் இயக்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழை” பெறுவார்கள்.

முன்பதிவு செய்வதற்கு

நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யுமாறு அனைத்து பங்கேற்பாளர்களையும் அழைக்கின்றோம்.

முன்பதிவு செய்ய லிங்க்: https://1930walkathon.in/ அறிக்கை நேரம்: மாலை 3:00 மணி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.