திருச்சி – மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒருவருட கால  ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாதுகாப்பு அலுவலர் (1 பணியிடம்) :  தொகுப்பூதியம் – ரூ.27,804/- (ஒரு மாதத்திற்கு)

Sri Kumaran Mini HAll Trichy

சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் மேம்பாடு, மனித உரிமைகள், பொது மேலாண்மை, உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம் மற்றும் சமூகவள மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒருபிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் முதுகலைபட்டம்  (10+2+3+2மாதிரி) பெற்றிருக்கவேண்டும். (Post Graduate Degree in Social Work / Sociology / Child Development / Human Rights /Public Administration / Psychology / Psychiatry / Public Health / Community Resource Management from a recognized University)

(அல்லது)

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் மேம்பாடு, மனித உரிமைகள், பொதுமேலாண்மை, உளவியல், மனநலம், சட்டம், பொதுசுகாதாரம் மற்றும் சமூகவள மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒருபிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலைபட்டம்  (10+2+3 மாதிரி) பெற்றிருக்க வேண்டும் மற்றும் திட்டம் தயார் செய்தல் ஃ செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும். சமூகநலன், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டில் பணிஅனுபவம் இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். (Graduate Degree in Social Work / Sociology / Child Development / Human Rights / Public Administration / Psychology / Psychiatry / Public Health / Community Resource Management from a recognized University with 2 years experience in Project Formulation / Implementation, Monitoring and Supervision in the Preferably in the field of Women and Child Development / Social Welfare. Proficiency in computers) 01.01.2025 அன்றுபடி 42 வயதிற்கு பூர்த்தி அடையாதவர்களாக இருக்க வேண்டும்.

சமூகப்பணியாளர்  (4 பணியிடங்கள்) :  தொகுப்பூதியம் – ரூ.18,536/- (ஒரு மாதத்திற்கு)

சமூகப்பணி, சமூகவியல், சமூகஅறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒருபிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலைபட்டம்  (10+2+3+2மாதிரி) பெற்றவர்கள்,குழந்தைகள் நலன் சார்ந்தபணிஅனுபவம் உள்ளவர்கள், கணினி இயக்குவதில் திறன் பெற்றிருப்பவர்களுக்குமுன்னுரிமைவழங்கப்படும். (Graduate Preferably in B.A in Social Work / Sociology
/ Social Sciences recognized University, Weightage for work experience candidate and Proficiency in computers)  01.01.2025 அன்றுபடி 42 வயதிற்கு பூர்த்தி அடையாதவர்களாக இருக்க வேண்டும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுயசான்றொப்பமிட்ட கல்விச் சான்றுகளின் நகல், பணி அனுபவ சான்றுகளின் நகல் இணைக்கப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பபடிவங்கள், உரிய சான்றிதழ்களின் நகல் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். மேற்கண்ட பணியிடங்கள் தற்காலிகமாக ஒருவருட ஒப்பந்த அடிப்படையிலானது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேற்கண்ட பதவிகளுக்கான விண்ணப்படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அறிவிப்பு வெளியான 15 தினங்களுக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி – 620 001. மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப. அவர்கள்தெரிவித்துள்ளார்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.