அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கோவில்பட்டியில் பள்ளி காவலாளியை அரிவாளால் தாக்கிய பள்ளி சிறுவன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜன் மகன் பாலகுமார் (28). கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள ஏவி அரசு உதவி பெறும் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார் .

இவர் நேற்று  பள்ளி அருகே உள்ள கடையில் உட்கார்ந்து இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவரை அதே பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுவன் அரிவாளால் தாக்கினான்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

பள்ளி காவலாளி தாக்குதல்
பள்ளி காவலாளி தாக்குதல்

சிறுவன் தாக்கியதில்  கழுத்தருகே வெட்டு காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து 14 வயது சிறுவனை பிடித்து இளம் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர் படுத்தினர். சிறுவனுக்கு அறிவுரை மற்றும் கவுன்சிலிங் வழங்கி விடுவித்தனர்.

போலீஸார் விசாரணையில் மாணவன் சுற்றி திரிவதை கண்டித்தும், படிக்கும் படி அடிக்கடி அறிவுரை வழங்கியதால்  ஆத்திரத்தில் வெட்டியதாக சிறுவன் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

 

           —     மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.