உன்னத பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம்!
உன்னத பாரத இயக்கத்தின் 2.0 திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம்
மே 1 உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படியும் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச மற்றும் விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச ஆகியோரின் ஆலோசனைப் படியும்,
உன்னத பாரத இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டோம்னிக் துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் படியும் உலக தொழிலாளர் தினத்தன்று செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் தேர்தெடுக்கப்பட்ட மணிகண்ட ஒன்றியத்தில் உள்ள நாகமங்கலம் சேதுராப்பட்டி, இனாம் மாத்தூர், அளுத்தூர் கவத்தநாயக்கன்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் இனாம்மாத்தூரில் பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி நடத்தப்படுவது பற்றியும் குளம் தூர்வருவது பற்றியும் உன்னத பாரத இயக்கத்தின் கீழ் அரசு நலத் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக டிஜிட்டல் எலக்ட்ரானிக் போர்டு அமைப்பது தொடர்பாகவும் ஒருங்கிணைப்பாளர் யசோதை அளுந்தூர் ஊராட்சியில் உன்னத பாரத இயக்கதின் கீழ் சிறுகாற்றாலை யாகப்புடையான் பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் நிறுவப்படுவது பற்றியும்,
நாகமங்கலத்தில் புகையிலை ஒழிப்பு மற்றும் கோடைகாலத்தில் மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டுவது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அரசு நலத்திட்டங்கள் கிராம பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இக்கூட்டத்தில் தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம பொதுமக்கள், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், விவசாய பெருங்குடி மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக்கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கையொப்பம் இடப்பட்டது.