அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் குளம் மறு சீரமைப்பு திட்டப்பணி துவக்க விழா!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி கிராம மக்கள் பயன்பாட்டுக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரி சக்தி ரோட்டரி சங்கம்  மற்றும் மாத்தூர் ஊராட்சி ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் மணிகண்டம் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட இனாம்மாத்தூர் கிராமத்தின் சின்ன குளம்  மறு சீரமைப்பு பணி  தொடக்க விழா ஊராட்சி மன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

குளம் மறு சீரமைப்பு பணி இவ்விழாவில் இத்திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இத்திட்ட தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இவ்விழாவிற்கு மணிகண்டம் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர்  அகஸ்டின் இம்மானுவேல் தேவநேசன் மற்றம் முன்னாள் மணிகண்ட ஒன்றிய பெருந்தலைவர்  கமலம் கருப்பையா ஆகியோர் தலைமை வகித்தார்கள்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  பாரதிதாசன் முன்னாள் துணைத் தலைவர் ரத்தினம் கிராம நிர்வாக அலுவலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ரோட்டரி சங்கம் மாவட்ட செயலர் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் ஆர் ஐ டி 3000 ரொட்டெரியன் இராமச்சந்திரன் பாபு சிறப்பு விருந்தினராகவும் மற்றும் சக்தி ரோட்டரி சங்கம் திருச்சி மாவட்டம் முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் என ரோட்டீரியன்களான சபீனா சம்பத் நிஷா அமுதா சுபாஷினி கலந்து கொண்டனர்.

குளம் மறு சீரமைப்பு பணி செயின்ட் ஜோசப் பணிமனைகளின் அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் மைக்கில் சே ச கல்லூரியின் செயலர் அருள்முனைவர் அமல் சே ச முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சேச மற்றும் வரிவாக்கத்துறை செப்பர்டு இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சேச  ஆகியோரின் ஆலோசனைப்படியும் வழிகாட்டுதலின்படி விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர்  லெனின் திட்டத்தின்  பயனையும் அதன் செயல்பாடுகளையும் பொறுப்புகளையும் எடுத்துக் கூறி வந்தவர்களை வரவேற்றார்.

குளம் மறு சீரமைப்பு பணி இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பாக  இளநிலை பொறியாளர் ஜோதி மாத்தூர் ஊராட்சி மன்ற செயலர் பிரான்சிஸ் ரோடேரியன்களான வள்ளி  திலகா ரமா சசிகலா சூசன் செரியன்   ஒருங்கிணைப்பாளர் யசோதா   மற்றும் மாத்தூர் கிராம மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வரிவாக்கத்துறையின் முது நிலை ஒருங்கிணைப்பாளர் லெனின், மாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலர் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மேலும் இத்திட்டம் நீர்வளப் பாதுகாப்பும் நீர் மேலாண்மைக்கும் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் பயன்பட உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.