*ரமணா-2-வில் சண்முகபாண்டியன்* ‘படை தலைவன்’ விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ்!
வி.ஜே.கம்பைன்ஸ்& தாஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் யு. அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படம் ‘படை தலைவன்’.
வரும் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரின் தம்பி எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, சசிகுமார், ஏ.ஆர். முருகதாஸ், பொன்ராம் படத்தின் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம், இயக்குநர் அன்பு, தயாரிப்பாளர்கள் டி. சிவா, ஜே.எஸ்.கே. சதீஷ், ஹீரோயின் யாமினி மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில் பேசிய சிலர்….
வசனகர்த்தா *பார்த்திபன் தேசிங்கு*
“சினிமாவில் என் மானசீக குரு, இன்ஸ்பிரேஷன் எல்லாமே முருகதாஸ் சார்தான். அவரது ஆசீர்வாதத்துடன் இங்கு இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் நான் வேலை பார்த்தது எனக்குப் பெருமை”.
*ஒளிப்பதிவாளர் சதீஷ் குமார்*,
“நான் கேப்டனுடன் ஒரு ஸ்டண்ட் காட்சியில் பணி புரிந்தேன். பெரிய அனுபவம் இல்லை என்றாலும் அனைவரின் சொல்லுக்கும் மதிப்பளிப்பவர் எங்கள் கேப்டன். அதே போல் சண்முக பாண்டியனும் எத்தனை டேக் சென்றாலும் அதை முடித்துக் கொடுத்து விட்டுத் தான் அங்கிருந்து கிளம்புவார். அவரிடத்தில் நான் என் கேப்டனைப் பார்க்கிறேன். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்”.
*ஹீரோயின் யாமினி சந்தர்*
“இந்தப் படத்திற்கு கேப்டனின் வாழ்த்து நமக்குக் கிடைத்துள்ளது. அதுவே பெரிய பாக்கியம். சண்முக பாண்டியன் சார் எங்கள் அனைவரையும் அன்பாக பார்த்துக்கொண்டார். இதில் எங்களை விட, யானையுடன் தான் அவர் அதிக காட்சிகள் நடித்துள்ளார். இருவரும் இணை பிரியா நண்பர்கள் ஆகிவிட்டனர். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.
*கஸ்தூரி ராஜா*
“படத்தின் தலைப்பே படத்திற்கு யானை பலம். அதை விட முக்கியம் கேப்டனின் ஆசீர்வாதம். அவருடன் எனக்குப் பல அனுபவங்கள் உண்டு, அதைச் சொல்ல எத்தனை மேடைகள் இருந்தாலும் பத்தாது. இந்தப் படத்தில் ஓய்வின்றி கடினமாக உழைத்தவர் ஒளிப்பதிவாளர் தான். கஷ்டப்பட்டு காட்சிகளை வடிவமைத்துள்ளார் வாழ்த்துக்கள். சண்முக பாண்டியன் யானையுடன் இணைந்து நடித்ததற்கு அசாத்திய தைரியம் தேவை. அதற்கு என் கேப்டன் தான் காரணம். படப்பிடிப்பில் இப்படக்குழு பல சிரமங்களைச் சந்தித்தனர், அத்தனையும் தாண்டி இந்தப் படம் இங்கு வந்ததற்குக் காரணம் இயக்குநரும் தயாரிப்பாளரும் தான். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்தப் படத்திற்கு இசை இளையராஜா. இந்தப் பெயரே போதும். அவரின் இசையைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றி பெறும்”.
*டி.சிவா*
“கேப்டனைப் போல மற்றொருவரைப் பார்க்க வேண்டுமெனில் அது சண்முக பாண்டியன் தான். கேப்டனின் தன்மை அப்படியே அவரிடம் உள்ளது. அது செட்டில் இருந்த அனைவருக்கும் தெரியும். சண்முக பாண்டியனின் வெற்றிக்கு மிகவும் சந்தோஷப்படுபவன் நான்தான்”.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் *ஶ்ரீதர்*
“இப்போது பெரிய நடிகர்கள் படம் என்று ஒரு சில படங்கள் மட்டும் தான் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் சிறு படங்கள்தான் திரையரங்கை வாழ வைத்துக் கொண்டுள்ளது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இந்தப் படம் இருக்கும். கேப்டனின் ஆசிர்வாதம் சண்முக பாண்டியனுக்கு உள்ளது”.
*இயக்குநர் பொன்ராம்*
“எனக்கு சண்முக பாண்டியனைப் பார்க்கும்போது அவர் தெரியவில்லை கேப்டன் தான் தெரிந்தார். அவரை பிரேமில் வைக்கும்போது அப்படி ஒரு பிரம்மாண்டம்.படம் பார்க்கும்போது உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். அனைவரும் பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளீர்கள்”..
*எல்.கே. சுதீஷ்*
“இந்தப் படம் சண்முக பாண்டியனுக்கு பெரிய வெற்றிப்படமாக அமையும். கேப்டனின் ஆசீர்வாதம் இந்தப் படத்திற்கு உள்ளது. அது மட்டுமல்ல, இந்தப் படத்தை வாழ்த்த பல நல்ல உள்ளங்கள் இங்கு வந்துள்ளனர். அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் அனைவரும் சந்திப்போம்”.

*விஜய பிரபாகரன்*
” நான் ஒரு ரசிகனாகத் தான் இங்கு வந்துள்ளேன். சினிமா மேடையில் நான் பேசியது இல்லை. இது எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. நான் என் தம்பிக்காக வந்திருக்கிறேன். என் அப்பா விஜயகாந்திற்கு நான் தான் முதல் ரசிகன். அதே போல் சண்முக பாண்டியனுக்கும் நான் தான் முதல் ரசிகன். கேப்டனை நீங்கள் பார்க்க நினைத்தால் சண்முக பாண்டியன் உருவத்தில் அவரை பார்க்கலாம். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளது ஒரு வரம் தான். படம் மிக நன்றாக இருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.
*சசிகுமார்*
“விஜயகாந்த் சார் எங்கள் மண்ணின் மைந்தன் , அவரை இயக்கும் ஆசை எனக்கு நிறைவேறாமல் போனது. ஆனால் கண்டிப்பாக சண்முக பாண்டியனை நான் இயக்குவேன். இந்தப் படை தலைவன் படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும்”
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தேமுதிக தலைவர் *பிரேமலதா விஜயகாந்த்*
“அரசியல் மேடை இல்லாமல் ஒரு சினிமா சார்ந்த மேடையில் நான் பேசுவது இதுவே முதல்முறை. சண்முக பாண்டியனை இனிமேல் உங்களிடம் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடமும், சினிமா துறை சார்ந்தவர்களிடமும் ஒப்படைக்கிறேன். கேப்டனின் இடத்தை எனது இரண்டு மகன்களும் நிரப்புவார்கள். இப்படம் மக்களுக்குப் பிடிக்கும்”
*ஹீரோ சண்முக பாண்டியன்*
”இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். காரணம் அப்பா இருக்கும்போது இந்தப் படத்தின் கதையைக் கேட்டிருந்தார். படத்தின் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்தப் படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம். இப் படத்தை கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களத்தைக் கொண்டது.

என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான். எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இந்த படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன். நிச்சயம் இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும்”.
*இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்*
”ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த் தான். அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும், அதை விஜயகாந்த் சார் செய்தார். எல்லோரும் விஜயகாந்த் குறித்துப் பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்துடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாகக் கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது,

விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களைக் கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள்… கண்டிப்பாக ‘ரமணா- 2’படம் எடுக்கலாம். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்”..
*இயக்குநர் அன்பு*
“என் தயாரிப்பாளர்களுக்கும், சண்முக பாண்டியனுக்கும் மிக்க நன்றி. என்னை நம்பி இந்த படைப்பை என்னிடம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன் என்று நம்புகிறேன், எனக்கு உதவியாக இருந்த படக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் நம் சந்திப்போம்”. #நாயகன் சண்முக பாண்டியனுடன் யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஸ்காந்த், ‘கருடா’ராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ.வெங்கடேஷ், எஸ்.எஸ்.ஸ்டான்லி, லோகு , ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
*தொழில்நுட்பக் குழு*
திரைக்கதை வசனம் : பார்த்திபன் தேசிங்கு
ஒளிப்பதிவு: சதீஷ்குமார்
படத்தொகுப்பு : இளையராஜா ,
ஸ்டண்ட்: மேத்யூ மகேஷ்
கலை இயக்கம்: ராஜூ
மக்கள் தொடர்பு – சதீஷ் & சிவா(எய்ம்)
— மதுரை மாறன்.