கோவில்பட்டியில் மின் விளக்குகள் அமைப்பதற்கான விழாவை தொடங்கி வைத்த துரை வைகோ !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முதல் முச்சந்தி விநாயகர் கோவில் வரை போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரிந்துரையின் படி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் 30 LED மின் விளக்குகள் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று இரவு நடைபெற்றது.
இதில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் நகர் மன்ற தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
— மணிபாரதி.